}

Thursday, November 19, 2009

அண்டமோனியா அம்மையாரும், சில வீரமான தமிழக காங்கிரஸ் பிரபலங்களும் பிறகு நானும்.. பாகம் 1

வணக்கமுங்க... எல்லோருக்கும் வணக்கம்... கொஞ்ச நாளா பதிவுலகத்திலே இருந்து விலகி இருந்தேன் ஆனால் நான் சில பதிவுகளை படித்து வந்தேன்..கடந்த ஒரு மாத காலமாக சில பதிவுகளில் நான் இட்ட பின்னூட்டம் எனக்கு பல பட்டங்களை தந்தது.. அது வேறும் ஒன்றும் இல்லேங்க உளருவாயன், ஒன்றும் தெரியாதவன் அப்படி இன்னும் சில.. எனக்கு அது முன்பே தெரியும் என்பதாலும் மேற்கூறிய பட்டங்களை தந்தவர் பேரறிஞர்( அண்ணா இல்லேங்க ) என்பதாலும் பிரச்சினை அதுவல்ல....

எனக்கு சில சந்தேகங்கள்... உங்களின் பெருவாரியான, நியாயமான கருத்துக்களின் அடிப்படையில் நான் ஒரு வேளை உண்மையாகவே தவறு செய்து இருந்தால் திருத்திக்கொள்ளவே இந்த பதிவு!!!!

ஒரு சின்ன தெரிந்த கதை பிறகு நிறைய தெரிந்த , தெரியாத விவரங்கள்...

ஒரு காட்டில் மிருகங்களின் தொகை அதிகரிக்கவே அதை கட்டுப்படுத்த வழி தெரியாமல் சிங்க ராஜா தவித்தது.. நரி அதற்கு ஒரு யோசனை சொன்னது. அதாவது காட்டில் இருக்கும் அனைத்து மிருகங்களும் ஒரே இடத்தில் கூட வேண்டும் , ஒவ்வொரு மிருகமும் ஒரு நகைச்சுவை சொல்ல வேண்டும். அந்த நகைச்சுவைக்கு அனைத்து மிருகங்களையும் சிரிக்க வைக்க வேண்டும் . ஒரு மிருகம் சிரிக்கவில்லை என்றாலும் கூட நகைச்சுவை சொன்ன மிருகத்தை மற்ற அனைத்து மிருகங்களும் வேட்டையாடிக்கொள்ளலாம் என்பதே அந்த யோசனை.

அதன்படி ஒரு நாளில் அனைத்து மிருகங்களும் ஒன்று கூடின. முதலில் ஒரு கரடி ஒரு நகைச்சுவை கூறியது. அதைக்கேட்ட அனைத்து மிருகங்களும் சிரித்தன ஆனால் ஒரு சுண்டெலி மட்டும் சிரிக்கவில்லை. எனவே அந்த கரடி கொல்லப்பட்டது. பின்பு ஒரு ஒட்டகச்சிவிங்கி கதை சொன்னது அதற்கும் எலியைத்தவிர மற்ற அனைத்து மிருகங்களும் சிரிக்கவே அதுவும் கொல்லப்பட்டது..
இதைக்கண்டு பயந்த படியே ஒரு முள்ளம்பன்றி நகைச்சுவை சொல்ல வந்தது, அதைக்கண்டதும் எலி பயங்கரமாக சிரித்தது.. உடனே சிங்கமும், பிற மிருகங்களும் மிகுந்த கோபத்துடன் எலியைப்பார்த்து காரணம் கேட்டன . அதற்கு அந்த எலி சொல்லியதாம்

ஒன்றும் இல்லை ராஜா! எனக்கு கரடி சொன்ன நகைச்சுவை நியாபம் வந்தது அதனால் தான் சிரித்தேன் என்று..


இந்த சுண்டெலியைப்போலவே நமது தமிழக காங்கிரஸாருக்கு திடீரென ரோசம், கோபம், தன்மானம் எல்லாம் காலம் கடந்து இப்போது வந்துள்ளது.... திமுக வை மிரட்டுகிறதாம்!!!!!


சரி நாம் விசயத்துக்கு வருவோம்.. இந்த பதிவை எழுத காரணமான சம்பவங்கள்

சம்பவம் 1

கீழ்கண்ட புகைப்படங்களை பாருங்கள்..
இரண்டுக்கும் ஏதாவது வேற்றுமை உள்ளதா?
ஒருவர் ஒருவேளை உண்ணாவிரதமிருப்பவர் மற்றவர் ஒரு நாள் மட்டும் ஏழையாக இருப்பவர்... ( ஒரு சமயம் இரண்டாம் வகுப்பில் மட்டும் பயணம் செய்து கொண்டிருந்தார். ஆனால் இப்போதும் அப்படியா எனக்கேட்டு சொல்லுங்கள்!!!)

எனக்கு வந்த சந்தேகம் என்னவெனில் இந்த பட்த்தில் வேண்டுமானால் முரண்பாடு இருக்கலாம் ஆனால் அதனால் குறைந்த பட்சம் சில ஏழைகளாவது பயன் பெறுவர் என்பதை மறுக்க முடியது, ஆனால் இந்த ஒரு நாள் ஏழையால் எத்துனை பேர் பயனடைந்தனர் ?






































இந்த பதிவுக்கான எனது பின்னூட்டமும் அதற்கான பதிலும்..

கேள்வி : //ஏங்க அப்படியே.. இந்த படத்தையும் பார்த்து எவ்வளவு கஷ்டப்படுராருன்னு சொல்லுங்களேன்!!!! அந்தம்மா இரும்பு சட்டி உங்க தலைவர் புது பிளாஸ்டிக் சட்டி.. அவங்க கால்லசசெருப்பு இல்ல உங்க த்லைவர் கால்ல .... பாருங்க
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi80B3ZTwmK1T4eMfusZIpOTI_iUM41x4vqZ7_mfyyV3jSlCtTUN5QoeKpkcJHu6MSyY6llejhN1T4zO8C5hEh0Fp4xf_S1WErWfdLoQrtTe7I5ZJgEckWWMjg1LAz7Dz7zehzx8QN7AXU/s400/Rahul+Gandhi.jpg //

// குற்றம் பார்க்கில் அரசியல் இல்லேங்க ... எல்லா கட்சியிலேயும் இப்படி நிறைய முரண்பாடு இருக்கு.. :))))))//

பதில் :// குறை ராஜ்குமார், உங்க மொக்கை லாஜிக் தாங்கலை.. ஒரு ஏழையின் மகனின் கஷ்டத்தை அறிந்துக் கொள்ள அந்த மகனின் தாயின் கணவராக மாற வேண்டும் என்பது போல் இருக்கு உங்க கொடுமையான லாஜிக். ஏன் ப்ளாஸ்டிக் சட்டி, கால் செருப்போட நிறுத்திட்டிங்க? புடவை, ரவிக்கை, பாவாடை , வளையல் எல்லாம் ஏன் எங்க தலைவர் அணிந்துக் கொள்ளவில்லை என்றும் கேட்டிருக்கலாம்.//

என் கேள்வி : ஹா ஹா ஹா.. அது லாஜிக் இல்லேங்க.. நீங்க ஒரு படத்த போட்டு கருத்த சொல்ரீங்க. நானும் அவ்ளொ தான்.. புடவை,ரவிக்கை எல்லாம் உங்க சமாளிப்பு.. நான் சொல்ல வந்த கருத்து வேர நீங்க சொல்ரது வேர,.. ஒருத்தர் கஷ்டப்பட்டு செய்ர வேலையில உங்க தலைவரும் எப்படி பங்கெடுத்துக்கிரார் ? அது தான் கேள்வி... என் புருசனும் கச்சேரிக்கு போனான் என்பது போல உங்க தலைவரும் வேலை இல்லே இல்லே கஷ்டப்பட்டு வேலை செய்ராராம்!!!
நீங்க எப்படி பல்லிளிக்கும் பகுத்தறிவுன்னு தலைப்ப நியாயப்படுத்தறீங்கலோ அதே மாதிறி பல்லிளிக்கும் பாட்டளி தோழமைன்னு எடுத்துக்கலாமில்லையா?//

பதில் : நான் ஒரு புண்ணாக்கும் சொல்லலை.. பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொண்டே எமன் என்பதை மட்டும் எப்படி நம்பலாம் என்பது தான் இங்க கேள்வி. புருஷன் கச்சேரி என்பதெல்லம் வழக்கமான உங்கள் அதிமேதாவி அரசியல் அறிவின் அடையாளத்தை தான் காட்டுது. ஒரு தலைவர் சாமானியனின் இடத்திற்கே வந்தால் தான் அவர்கள் கஷ்டம் புரியும் என்று ஒரு பக்கம் கத்திக் கொண்டே, அப்படி யாராவது வந்து அவர்கள் கஷ்டத்தை நேரடியாக உணர்ந்தால் அய்யோ விளம்பரம் , புருஷன் கச்சேரிக்குப் போறான் என்றெல்லாம் உளறிக் கொண்டிருக்கிறோம். மேனுஃபேக்சரிங் டிஃபெக்ட்.

எனது கேள்வி : இப்படிதான் ஒருதடவ கலாவதின்னு ஒரு அம்மா வீட்டுக்கு போய் கஷ்ட்டப்பட்டு வந்து பாராளுமன்றதில் எல்லாம் பேசினாரு.. இப்போ அந்தம்மா எவ்வளவு வசதியா இருக்காங்கன்னு உங்க தலைவர்தான் சொல்லணும்..

ரெண்டவது இந்த கலைஞர் காப்பீட்டுதிட்டம் விளம்பரம், அணுகுமுறை வேணும்னா தப்பா இருக்கலாம் ஆனா அதனால பல ஏழைகள்(அவங்க திமுகவாகவே இருந்தாலும்) பயனடையராங்க.. ஆனா உங்க தலைவரோட ஏழ்மை உணர் திட்டத்தால எத்தன பேர் பயனடைஞசு இருக்காங்கன்னு சொல்ல முடியுமாங்க?

முக்கியமான ஒரு விசயம்... கருணாநிதி பேசரதெல்லாம் மத்தவங்களுக்கு மட்டும் தான்னு ஊருக்கே தெரியும்.. அப்படி இருந்தும் நீங்க படம் போட்டு விளக்கம் சொல்றீங்க அதே சமயம் உங்க தலைவர் படத்த பத்தி சொன்னா கோவம் வருது :)))))))

பதில் : இந்த சப்பை கேள்விக்கெல்லாம் எங்க தலைவர் பதில் சொல்லனுமா? நானே சொல்றேன். அந்த கலாவதி மஹாரஷ்ட்ரா சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு வசதியா இருக்காங்க.. கடைசி நேரத்துல விலகிட்டாங்க. கொஞ்சம் செய்தியும் படிங்க.

கருணாநிதியின் திட்டத்தை யாரும் குறை சொல்லலை. அந்த விளம்பரத்தை மட்டும் தான். ஒரு முதல்வருடன் ஒரு எம்பியை ஒப்பிடும் உங்கள் மேதாவித்தனம் மீண்டும் மீண்டும் என்னை சோர்வடைய வைக்கிறது. முதல்வரால் திட்டங்களை அறிவித்து செயல்படுத்த முடியும். ஒரு எம்பியால் அவ்வாறு செய்ய முடியாது. மேலும் 100 நாள் கட்டாய வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கி சிறப்பாக செயல்படுத்த அவரும் காரணம். சில கயவாளிகளால் அது சில இடங்களில் கேவலமாக செயல் படுத்தப் படுகிறது.

என்ன சொன்னாலும் நீங்கள் திருப்தி அடைய போவதில்லை. இனி உங்களுக்கு பதில் சொல்லப் போவதும் இல்லை.


எனது கேள்வி : செய்திய முழுசா படிங்க .. அவங்க ஏன் அந்த முடிவு எடுத்தாங்கன்னு... அவர் ஒரு நாள் எழையா இருந்தும் எந்த பிரியோஜனமும் இல்லாம தான்..


அப்புரம் அந்த ஒப்புமைக்கு நீங்க குடுத்த விளக்கத்திலேயே உங்க மேதாவித்தனமும் நல்லா தெரிய்துங்க.. அவர் வெரும் எம்பியா மட்டும் இருந்தா நான் ஏன் கேட்கபோறேன்..? ஊருக்கே தெரியும் அவருடைய பவர் என்னன்னு..:)))))) உங்கள நினைச்சா சிரிப்பா இருக்கு..விட்டா அவரை தொண்டர் மட்டும் தான்னு சொல்வீங்க போல!!!

அப்புரம் வெரும் எம்பி எப்படி அந்த 100 நாள் திட்டத்திலே பங்கேத்தாருன்னு நீங்க தான் விளக்கணும்..

//இனி உங்களுக்கு பதில் சொல்லப் போவதும் இல்லை//

எதிர் பாத்தேன்.. நன்றி//


நண்பர்களே எனது சந்தேகம் ஒன்று தான் கலைஞரின் பகுத்தறிவு (!!!) ஊரறிந்த உண்மை.ஆனால் ராகுலின் ஒரு நாள் ஏழை நாடகம் ?

கடந்த ஐந்தாண்டுகளாக திமுக என்ன செய்தாலும் பொறுத்துக்கொண்டது காங்கிரஸின் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம் தானே? திமுக செய்த அனைத்து ஊழல் காரியங்களும் காங்கிரஸுக்கு தெரியாமல் நடந்திருக்காது ஆகவே அதுவும் ஊழலின் ஒரு பங்காளி,..உண்மையாகவே அவர்கள் கூவுவது போல் இந்தியாவின் மேல் அக்கரை இருந்தால் எந்த ஊழலும் நடக்காமல் தடுத்திருக்க வேண்டும். கெட்டது செய்வது விட அதற்கு துணை போவது பெருங்குற்றமல்லவா? இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால் காங்கிரஸ் செய்தது விளக்கு பிடிக்கும் செயலுக்கு ஒப்பானதே !!!!! பாவம் இப்போது தான் விளக்கின் சூடு தெரிகிறது போல உள்ளது !!!!


மிக முக்கிய பின் குறிப்பு : நான் திமுக அபிமானி என நினைப்பவர்களுக்கு நேரமிருந்தால் எனது முந்தைய படைப்புகளை பார்க்கவும் !!!!

17 பதிலடிகள்...:

Malini's Signature said...

அப்பாடா வந்துடீங்களா....

என்னதான்.. நடக்கும்... நடக்குட்டுமே...

suvaiyaana suvai said...

nallathaan irrkku!!

Admin said...

தாங்க முடியலடா சாமியோவ்.... சிரிப்பா சொன்னேன்.

வாங்க.... வாங்க.....

மணிஜி said...

கமெண்ட் போடறதை எளிமையாக்கு தம்பி.மற்றபடி பெரிய குறை ஒன்றும் இல்லை...

Unknown said...

லேட்டா போட்டாலும் லேட்டஸ்ட்டா போட்டிருக்கீங்க வாழ்த்துக்கள்

புலவன் புலிகேசி said...

நல்லாத்தான் இருக்கு

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

லேட்டா போட்டாலும் லேட்டஸ்ட்டா போட்டிருக்கீங்க, கவுண்டரை எதிர்பார்க்கிறோம்

ஆயில்யன் said...

குறை ஒன்றும் இல்லை - நம்மிடம் :)

ஃபீல் ஃப்ரீ - அரசியல்வியாதிகள் நம்மை அணுக இடம் கொடுக்க வேண்டாமே!

shortfilmindia.com said...

அண்ணே.. நல்லா இருக்குண்ணே

சிநேகிதன் அக்பர் said...

விடுங்க ராஜ்குமார். பொதுவா அரசியல் பற்றிய விவாதங்களில் முடிவு காண முடியாது. பதில் எதிர் பதில் என்று இழுத்துக்கொண்டே போகும்.

நீண்ட நாளைக்கு பிறகு பதிவிட்டது மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்க, வாரம் ஒருமுறையாவது.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ராஜ்குமார் , ரொம்ப நாளைக்கு அப்புறம் கதை நல்லா சொல்லிருக்கீங்க

ரொம்ப நன்னாருக்குவே ... கலக்குங்க

:-)))

Menaga Sathia said...

திரும்ப வந்தாச்சா ராஜ்..சந்தோஷம்!!

கதை நல்லா இருக்கு ராஜ்.

Jaleela Kamal said...

டைடல் பார்க் ல உட்கார்ந்து ஒரு மாதமா யோசித்து பதிவு போட்டீங்களா?

ரொம்ப சந்தோஷம் மீண்டும் வந்து பதிவு போட்டது.

லேட்டா போட்டாலும் லேட்டஸ்டான பதிவு வாழ்த்துக்கள், தொடர்ந்து முடியலன்னாலும், மாதம் ஒரு பதிவாச்சாம் போடுஙக்ள்.

என் பிலாக்கு ஓட்டு போடுவதையும் உங்கள் காமடியான பின்னூட்டம் போடுவதையும் மறந்துடாதீங்க... ஹி ஹி டிப்ஸ் பகுதி பார்க்கலையா நிறைய பதிவு போட்டாச்சு.

குறை ஒன்றும் இல்லை !!! said...

கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி,... நான் ஆயில்யன் மற்றும் அக்பர் ஆகியோரின் அறிவுரைகளை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்...

Beski said...

கதை மட்டும் படிச்சேன்.
அரசியல் நமக்கு விளங்காது.

குறை ஒன்றும் இல்லை !!! said...

பரவால்லே பெஸ்கி !! அதுதான் நல்லது கூட !!!

Unknown said...

santhosham raj..... ithai vida ungalathu matra sil pathivugal pidithirundhadhu.. aanaal pinnootamida mudiyavillai

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!