}

Sunday, August 9, 2009

பதிவர்களுக்கு கூகுள் சொல்லும் நீதி..

அண்மையில் பல பதிவர்களால் தங்களது பதிவை காண இயலவில்லை.. எனக்கு இதுவரை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை(!!!??).. அந்த பிழைச்செய்தி கீழ்கண்டவாறு கிடைப்பதாக அறிந்தேன்....

We're sorry...

... but your computer or network may be sending automated queries. To protect our users, we can't process your request right now.
See Google Help for more information.



ஆக, கூகுள் தனது சேவையை நிறுத்தினாலோ, அல்லது கட்டண சேவையாக மாற்றினாலோ(கண்டீப்பாக அப்படி நடக்காது!!!) என்ன நடக்கும்?

* பதிவுலக பிரம்மாக்கள் அதாங்க பிரபல பதிவர்கள் என கூறிக்கொள்பவர்களை அவர்களின் வீட்டை(கணிணியை) விட்டு வெளியில் வந்தாலே அடையாளம் தெரியாமல் போகும்..

* பல வஷிஷ்டர்கள் (நினைப்பு தாங்க !!) பிறருக்கு பிரம்மரிஷி பட்டமும் அளிக்க இயலாமல் போகும்!!

* தமிழ்மணம், தமிழிஷ் போன்றவைகளை நடத்தும் சில பதிவர்கள்( ஐடியா விளம்பரம் போல) ஈ ஓட்ட ஆரம்பித்து விடுவர்..

* இந்த ஓட்டு, எதிர் ஓட்டு , கள்ள ஓட்டு பிரச்சினை எதுவும் இருக்காது

* வலியவர் , எளியவர்களை கூட்டமாக சேர்ந்து கும்மியடிக்க இயலாமல் போகும்!!!

* கண்டீப்பாக என் போன்றோர் வேலை செய்யும் அலுவலகத்தில் பழைய நிலையை விட அதிக உற்பத்தியை ஈட்ட வாய்ப்பு ஏற்படும்

* மிகப்பெரும் தலைவர்களை விட பெரிய ஆளாக தம்மை நினைத்து ( அதாங்க முதல்வர், முன்னால் முதல்வர், எதிர்கட்சி தலைவர்கள், பல பிரபல நட்சத்திரங்கள்) தம்மை பற்றி ஏதேனும் சொன்னால் தமது அடி பொடிகளுடன் சேர்ந்து கும்மி அடிக்க இயலாமல் போகும்!!!

* குடும்பத்துடன், நண்பர்களுடன் நேரம் செலவளிக்க வாய்ப்பு கிடைக்கும்..

* ஓட்டையும், பின்னூட்டத்தையும் தனித்தனியாக வாங்கிக்கொண்டு அவைகளுக்கான பதிலை மட்டும் ஒரே வரியில் எழுத வாய்ப்பு கிடைக்காமல் போகும்..




பின் குறிப்பு : இது நகைச்சுவைக்காகவே ,யார் மனதையும் புண்படுத்த அல்ல என்றெல்லாம் கூறப்போவதில்லை.. ஏனெனில் இது நடந்தவை, நடந்து கொண்டிருப்பவையே.. இதை சொல்ல எனக்கு எந்த பயமோ, வருத்தமோ இல்லை..அதே சமயம் இந்த பதிவுலகம் எனக்கு பல நண்பர்களை தந்திருக்கிறது. அதை மறுக்கவோ, மறக்கவோ இல்லை !!!

20 பதிலடிகள்...:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//கட்டண சேவையாக மாற்றினாலோ(கண்டீப்பாக அப்படி நடக்காது!!!) //

அதெப்படி தல அவ்வளவு உறுதியா சொல்றீங்க?

Admin said...

//பின் குறிப்பு : இது நகைச்சுவைக்காகவே ,யார் மனதையும் புண்படுத்த அல்ல என்றெல்லாம் கூறப்போவதில்லை.. ஏனெனில் இது நடந்தவை, நடந்து கொண்டிருப்பவையே.. இதை சொல்ல எனக்கு எந்த பயமோ, வருத்தமோ இல்லை..அதே சமயம் இந்த பதிவுலகம் எனக்கு பல நண்பர்களை தந்திருக்கிறது. அதை மறுக்கவோ, மறக்கவோ இல்லை !!!

அப்படிப்போடு... உங்கள் மனக்குமுறல் புரிகிறது...

ப்ரியமுடன் வசந்த் said...

//அண்மையில் பல பதிவர்களால் தங்களது பதிவை காண இயலவில்லை.. எனக்கு இதுவரை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை(!!!??)..//

நீங்க ரொம்ப நல்லவருங்க ராஜ்

Beski said...

//* கண்டீப்பாக என் போன்றோர் வேலை செய்யும் அலுவலகத்தில் பழைய நிலையை விட அதிக உற்பத்தியை ஈட்ட வாய்ப்பு ஏற்படும்

* குடும்பத்துடன், நண்பர்களுடன் நேரம் செலவளிக்க வாய்ப்பு கிடைக்கும்..//

இது ரெண்டும் சூப்பர்.
---
//அதே சமயம் இந்த பதிவுலகம் எனக்கு பல நண்பர்களை தந்திருக்கிறது.//
நம்மளையும் சேத்துதான சொல்றீங்கோ?

ஆ.ஞானசேகரன் said...

இப்படியெல்லாம் நடக்குதுதா? உங்களின் ஆதங்கமும் புரிகின்றது

குறை ஒன்றும் இல்லை !!! said...

#####SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது ############
// அதெப்படி தல அவ்வளவு உறுதியா சொல்றீங்க?//


வாங்க சுரேஷ்.. எல்லாமே ஒரு நம்பிக்கை தான்!!

________________________________________________________
###############சந்ரு சொன்னது ##############

//அப்படிப்போடு... உங்கள் மனக்குமுறல் புரிகிறது...//

வாங்க ஜோ.. மனக்குமுறல் எல்லாம் இல்லீங்க.. நமக்கு தோன்றத எழுத தானே இங்கே வந்திருக்கோம் !!!

_________________________________________________________

####பிரியமுடன்.........வசந்த் சொன்னது ###########

//அண்மையில் பல பதிவர்களால் தங்களது பதிவை காண இயலவில்லை.. எனக்கு இதுவரை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை(!!!??)..//

நீங்க ரொம்ப நல்லவருங்க ராஜ் //

வாங்க வசந்த் !!!! அப்படி எல்லாம் இல்லீங்க!! ஒரு வேளை காய்ச்ச மரம் தான் கல்லடி படுமோ!!!

____________________________________________________

###எவனோ ஒருவன் சொன்னது ####################

//* கண்டீப்பாக என் போன்றோர் வேலை செய்யும் அலுவலகத்தில் பழைய நிலையை விட அதிக உற்பத்தியை ஈட்ட வாய்ப்பு ஏற்படும்

* குடும்பத்துடன், நண்பர்களுடன் நேரம் செலவளிக்க வாய்ப்பு கிடைக்கும்..//

இது ரெண்டும் சூப்பர்.
---
//அதே சமயம் இந்த பதிவுலகம் எனக்கு பல நண்பர்களை தந்திருக்கிறது.//
நம்மளையும் சேத்துதான சொல்றீங்கோ?


வாங்க பெஸ்கி.. கண்டீப்பா.. ஏன்னா நீங்க தான் முதல் நண்பர் எனக்கு !!!!!
_____________________________________________________
###########ஆ.ஞானசேகரன் சொன்னது ##############

//இப்படியெல்லாம் நடக்குதுதா? உங்களின் ஆதங்கமும் புரிகின்றது//

ஆதங்கம் எல்லாம் இல்லீங்கோ ஞானசேகரன்!!! சும்மா தான்.. தோணுச்சு .. எழுதினேன்!!

__________________________________________

குடுகுடுப்பை said...

இந்த மாதிரியெல்லாம் நடக்குதுன்னுதான் எங்க ஆபிஸ்ல எல்லாத்தையும் தடை பண்ணிட்டாங்க.

Anonymous said...

கண்ணாடிப்பா நீங்க அப்படியே பிரதிபலிக்கிறீங்க.....குறையென்றுமில்லைத் தான் உங்களிடம்...ரொம்ப வெளிப்படையான உண்மைத் தகவல்......தொடரட்டும் துணிச்சல்...

Raju said...

நல்லாருந்துச்சு சாமியோவ்..
ஆமா, இது எத்தன நாள் காண்டு.
:)

Suresh Kumar said...

பின் குறிப்பு : இது நகைச்சுவைக்காகவே ,யார் மனதையும் புண்படுத்த அல்ல என்றெல்லாம் கூறப்போவதில்லை.. ஏனெனில் இது நடந்தவை, நடந்து கொண்டிருப்பவையே.. இதை சொல்ல எனக்கு எந்த பயமோ, வருத்தமோ இல்லை..அதே சமயம் இந்த பதிவுலகம் எனக்கு பல நண்பர்களை தந்திருக்கிறது. அதை மறுக்கவோ, மறக்கவோ இல்லை !!!////////////

எப்படி தல இவ்வளவு துணிச்சலா சொல்லிட்டீங்க .

ஒரு நாள் என் பிளாக் ஓபன் ஆகததற்கே நான் ஆடி போயிட்டேன் உங்களுக்கு தெரியும் . ஏதோ நல்லது நடந்தால் சரி

கார்த்திக் said...

இந்த பதிவுலகம் அனைவருக்கும் போதயுலகம் போல் ஆகிவிட்டது.. மீண்டு வருவது கடினம்..

குப்பன்.யாஹூ said...

if they make paid service we will stop using. then automatically they will chnage back to free service, example: kumudma.com, ambalam.com.

we all know that blog or chat or orkut is not going to give any monetray benefit to real life. These virtual world is an outlet to stress out, thats all.

. said...

//குடும்பத்துடன், நண்பர்களுடன் நேரம் செலவளிக்க வாய்ப்பு கிடைக்கும்..//

உண்மை தானுங்க... இப்டி சொன்னதும்... எப்பவுமே கணினி முன்னாடியே உக்காந்துற்றுக்கேன்னு நெனச்சிட வேணாம்!! நான் உங்க பதிவுக்கு இவ்ளோ தாமதமா பின்னூட்டம் போடறதுக்கு ஒரு காரணம் சனி ஞாயிறுகள்ள கணினிக்கு நான் leave விட்டது தான்!! ;) :)

sivanes said...

நியாயமான கோபம்! தங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன்!

குறை ஒன்றும் இல்லை !!! said...

#########குடுகுடுப்பை சொன்னது ###################

//இந்த மாதிரியெல்லாம் நடக்குதுன்னுதான் எங்க ஆபிஸ்ல எல்லாத்தையும் தடை பண்ணிட்டாங்க.//

வாங்கண்ணா.. எங்க ஆபீஸ்லேயும் தான்!!!

_____________________________________________________

###########தமிழரசி said...###################

// கண்ணாடிப்பா நீங்க அப்படியே பிரதிபலிக்கிறீங்க.....குறையென்றுமில்லைத் தான் உங்களிடம்...ரொம்ப வெளிப்படையான உண்மைத் தகவல்......தொடரட்டும் துணிச்சல்...//

வாங்க தமிழரசி.. நன்றிங்க ...

________________________________________________

###########டக்ளஸ்... சொன்னது#####################

நல்லாருந்துச்சு சாமியோவ்..
ஆமா, இது எத்தன நாள் காண்டு.
:)

வாங்க டக்ளஸ் அண்ணே!! நன்றி.. காண்டெல்லாம் இல்லீங்க..

____________________________________________________

############ Suresh Kumar சொன்னது ##############

// எப்படி தல இவ்வளவு துணிச்சலா சொல்லிட்டீங்க .

ஒரு நாள் என் பிளாக் ஓபன் ஆகததற்கே நான் ஆடி போயிட்டேன் உங்களுக்கு தெரியும் . ஏதோ நல்லது நடந்தால் சரி//

வாங்க சுரேஷ்... இதுல பயப்பட என்னங்க இருக்கு? நமக்கு தோணறத எழுத தானே இந்த பதிவு!!!
____________________________________________________

######## கார்த்திக் சொன்னது ################3

//இந்த பதிவுலகம் அனைவருக்கும் போதயுலகம் போல் ஆகிவிட்டது.. மீண்டு வருவது கடினம்..//

வாங்க கார்த்திக்.. அப்படி எல்லாம் இல்லேங்க.. போதுமான வேலை இருந்தா யாரும் வர மாட்டோம்!!!
_____________________________________________
#########ராம்ஜி.யாஹூ said...################

// if they make paid service we will stop using. then automatically they will chnage back to free service, example: kumudma.com, ambalam.com.

we all know that blog or chat or orkut is not going to give any monetray benefit to real life. These virtual world is an outlet to stress out, thats all.//

வாங்க ராம்ஜி. நன்றி.. புதிய தகவலுக்கு !!
______________________________________________________

############# Priyanka சொன்னது ##########

// உண்மை தானுங்க... இப்டி சொன்னதும்... எப்பவுமே கணினி முன்னாடியே உக்காந்துற்றுக்கேன்னு நெனச்சிட வேணாம்!! நான் உங்க பதிவுக்கு இவ்ளோ தாமதமா பின்னூட்டம் போடறதுக்கு ஒரு காரணம் சனி ஞாயிறுகள்ள கணினிக்கு நான் leave விட்டது தான்!! ;) :)//

வாங்க பிரியங்கா.. நன்றி.. ஆமா பொண்ணுக இல்லேண்ணா ஆமாண்ணு அர்த்தமாமே? உண்மையா?
____________________________________________________

##########சிவனேசு said...##########################

//நியாயமான கோபம்! தங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன்!//
வாங்க சிவனேசு.. நன்றிங்க!!

August 10, 2009 8:27 PM

GEETHA ACHAL said...

எனக்கு இப்படி தான் வெள்ளி கிழமை அன்று , ப்ளாகினை ஒபன் செய்யும் பொழுது வந்தது...மிகவும் டென்ஷ்னாகிவிட்டேன்...

அப்புறம் என்ன..Network Connectionku Customer service call செய்து 45 நிமிடங்கள் அதனை பற்றி விளக்கியது தான் மிச்சம்...

அப்புறம், அவ மிகவும் கூலாக ' இது மாதிரி நிறைய பேருக்கு ஆகி இருக்கு...எல்லோரும் கல் செய்துகிட்டு தான் இருக்காங்க...ஒரு 2 மணி நேரம் கழித்து ஒபன் செய்து பாருங்கள்' என்றாள்..

பரவயில்லை..நீங்க தப்பித்துவிட்டிங்க...

சிநேகிதன் அக்பர் said...

போச்சா. மேலே சொன்ன எதுவும் எனக்கு பொருந்த வில்லையே அப்ப நான் பிரபல பதிவர் இல்லையா.

Menaga Sathia said...

எனக்கும் இந்த மாதிரி எரர் வந்திருக்கு ராஜ்.ஆனா நீங்க ரொம்ப நல்லவரு அதான் உங்கலுக்கு எந்த தப்பும் நடக்கல.உங்கமனக்குமுறல் புரியுது.துணிச்சலை பாராட்டுகிறேன்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

###########கீதா ஆச்சல் சொன்னது #################
//எனக்கு இப்படி தான் வெள்ளி கிழமை அன்று , ப்ளாகினை ஒபன் செய்யும் பொழுது வந்தது...மிகவும் டென்ஷ்னாகிவிட்டேன்...

அப்புறம் என்ன..Network Connectionku Customer service call செய்து 45 நிமிடங்கள் அதனை பற்றி விளக்கியது தான் மிச்சம்...

அப்புறம், அவ மிகவும் கூலாக ' இது மாதிரி நிறைய பேருக்கு ஆகி இருக்கு...எல்லோரும் கல் செய்துகிட்டு தான் இருக்காங்க...ஒரு 2 மணி நேரம் கழித்து ஒபன் செய்து பாருங்கள்' என்றாள்..

பரவயில்லை..நீங்க தப்பித்துவிட்டிங்க...//

வாங்க கீதா..ஒரு வேளை நான் இன்னும் பிரபலமாகலியோ???

குறை ஒன்றும் இல்லை !!! said...

############அக்பர் சொன்னது #################

// போச்சா. மேலே சொன்ன எதுவும் எனக்கு பொருந்த வில்லையே அப்ப நான் பிரபல பதிவர் இல்லையா.//

நானுன் தாங்க அக்பர்..!!!!
_____________________________________________________
##########Mrs.Menagasathia சொன்னது ##########

// எனக்கும் இந்த மாதிரி எரர் வந்திருக்கு ராஜ்.ஆனா நீங்க ரொம்ப நல்லவரு அதான் உங்கலுக்கு எந்த தப்பும் நடக்கல.உங்கமனக்குமுறல் புரியுது.துணிச்சலை பாராட்டுகிறேன்.//

வாங்க மேனகா.நன்றி.. மனக்குமுறல் இல்லேங்க..

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!