}

Friday, December 31, 2010

என்ன செய்ய வேண்டும் எதிர் கட்சிகள்? குறிப்பாக அதிமுக.....



மக்களே வணக்கம் !!!!  நீண்ண்ண்ண்ட இடைவெளிக்கு பிறகு என் பதிவு ... முதலாக அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

இப்போதெல்லாம் எங்கே பார்த்தாலும் ஸ்பெக்ட்ரம், ஊழல் , இலவசம், அடுத்த தேர்தலுக்கான கூட்டணி என பரபரப்பு தலைப்பு செய்திகள்.. நாமும் அதில் ஒரு சிறு துளியாக.....

                                                                                                                 









முதலில் திமுக பற்றி , சந்தேகமே இல்லை , 1996 ஆம் ஆண்டின் அதிமுக வை நியாகபகபடுத்துகிறது... கண்டீப்பாக தோல்வி(!!??) தான் என தெரிந்தும் இன்னமும் நம்பிக்கையோடு . கடந்த வருட இலவசங்களையும் , வரப்போகும் தேர்தலுக்கான இலவசங்களையும் சாதனையென கூறியே ஓட்டு கேட்க திட்டமிடும்.. இங்கே தான் எதிர் கட்சிகள் திமுகவின் சாதனைகளை சோதனைகளாகவும், இலவசங்களை இழப்புகளாகவும் மக்களிடம் சென்று சேர்ப்பிக்க வேண்டும்.  

 எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டின் சோதனைகளில் முக்கியமானது இலவச தொலைக்காட்சி. ஒரு ரூபாய் அரிசி மட்டும் அரசு காப்பீட்டு அட்டை... இதன் மூலம் ஒரு குடிமகன் அதிக பட்சமாக எவ்வளவு பயனடைந்து இருக்க கூடும்? அதிக பட்சம் 5000 ? நான் சராசரியாக சொல்கிறேன்.....



 இனி நம் கணக்கு, கடந்த நான்கரை ஆண்டுகாலத்தில் ஏற்பட்ட விலை உயர்வு , பெட்ரோல், மளிகை பொருட்கள், இதர அடிப்படை தேவைக்கான பொருட்கள், பிழைப்புக்கான ஆதார பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வுகளை வருச வாரியாக பட்டியலிட்டு ஒவ்வொரு ஆண்டின் விலை உயர்வு மற்றும் அதானால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை கணக்கிட்டு கூறினாலே போதும்...
இலவசங்களை வாங்கிக்கொண்டு ஓட்டு  போட்டதால் மக்களுக்கு கிடைத்த பயன்களை விட இழப்பு மிக மிக அதிகமாக இருக்கும். இதை முறையாக மக்களுக்கு கொண்டு சென்றாலே போதும் கருணாநிதியை அவருடைய சொந்த பிரச்சினைகளுக்கு பஞ்சாயது பண்ண அனுப்பி விடலாம்!!!!









 சந்தேகம் 1:-
 அம்மிணி நீரா ராடியாவின் பேச்சுகளுக்கு ஏன் இன்னமும் தமிழ் பத்திரிக்கைகளும், எதிர் கட்சிகளும் முக்கியத்துவம் தரவில்லை என்பது ...... இதே அதிமுக சம்பந்தப்பட்டிருந்தால் இப்படியா விட்டிருப்பார்கள்?

சந்தேகம் 2:-
          அதிமுக ஆட்சியை பற்றி திமுக குறை கூறும் போதெல்லாம்  தருமபுரி தீ எரிப்பு சம்பவதை கூற தவறுவதில்லை.. சந்தேகமே இல்லாமல் இது கடுமையான குற்றம் தான்.. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து தூக்கு தண்டணை கூட கொடுத்தாயிற்று. ஆனால் தினகரன் பத்திரிக்கை எரிப்பு சம்பவத்திற்கு பிறகு ஏன் இன்னமும் யாரும் கைது செய்யப்பட வில்லை? ஆகவே தருமபுரி எரிப்பை , தினகரன் சம்பவத்தோடு ஒப்புமை படுத்துவத்து நியாயமில்லை எனவே தோன்றுகிறது...                   
                        
சந்தேகம் 3:-

          காங்கிரஸின் பெரிய மாப்பிள்ளை அப்சல் குரு மற்றும் காஸ்ட்லி சின்ன மாப்பிள்ளை கசாப்பை ஏன் இன்னமும் இன்னமும் விருந்தாளியாக வைத்திருக்கின்றனர் என்பதே? இவர்களை விடுதலை செய்து பாகிஸ்தான் அனுப்பினால் அவர்களே சந்தேகப்பட்டு இவர்களை கொன்று விடக்கூடும்...                                    

Tuesday, March 9, 2010

ஆல்ட் +கன்ட்ரோல்+டெலிட்

நம்ம வேக்காடு வீராசாமி தயவுல நிறைய பேர் மின்சார பற்றாக்குறைய அனுபவிச்சிட்டு இருப்பீங்க.. இடுகை அவர பத்தினது இல்ல ... என்ன போல பல கணிணி நிறுவனங்களில வேலை செய்ரவங்களுக்கானது...



நம்ம நாட்டில இருக்கிர கணிணி நிருவன வல்லுநர்களுக்கு(!!!) ரொம்ப தெரிஞ்ச கணிணி வார்த்தை ஆல்ட் +கன்ட்ரோல்+டெலிட் ஆக தான் இருக்கும். ஏன்னா ஒவொருத்தரும் வேலைய முடுச்சிட்டி போரப்ப அவங்கவங்க கணிணிய ஆல்ட் +கன்ட்ரோல்+டெலிட் மூலமாக தான் லாக் பண்ணிட்டு கெளம்புவாங்க.. ஆனா முறையா கணிணி இயக்கத்த நிறுத்தாம(shutdown) இப்படி பண்ணீட்டு போனா என்ன நஷ்டம்? அதப்பத்தினது தான் இந்த இடுகை !!! ஒரு கணிணி முறையாக நிறுத்தப்படாமல் வெறுமனே ஆல்ட் +கன்ட்ரோல்+டெலிட் மூலம் லாக் செய்யப்பட்டால்(Hibernate) அது செலவளிக்கும் மின்சார அளவு 35 வாட் இந்த கணக்கின் அடிபடையில் நம்ம புரட்சிக்கலைஞர் பாணியில் ஒரு புள்ளி விபரக்கணக்கு...


ஒரு வாரத்திற்கு கணிணி உபயோகம் = 24*7=168 மணிநேரங்கள்..
இதில் வேலை(!!!) நேரம் 68 மணி நேரங்களாக வைத்துக்கொண்டால் ஒரு வாரத்திற்கு அது இயங்காமல் ஆனால் முறையாக நிறுத்தாமல் வைத்திருக்க ஆகும் நேர அளவு =100 மணி நேரம் ஒரு மாதத்திற்கு 4*100=400 மணி நேரங்கள்.

ஒரு சராசரி கணிப்பொறி நிறுவனத்தில் 250 கணிப்பொறிகள் இருப்பதாக வைத்துக்கொண்டால் 250*400=1,00,000 மணி நேரங்கள் .

ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 6 என கணக்கிட்டால் மொத்த இழப்பு ரூபாய் 21,000.
இங்கு இழப்பு பணம் மட்டும் எனில் பிரச்சினையில்லை ஆனால் மின்சாரம்? நாம் ஒவ்வொரு துளி மின்சாரத்தையும் செலவளிக்கும் போதும் மின்சாரத்தை தயாரிக்கும் பணியில் உள்ள ஊழியர்களின் நிலையைச் சற்று சிந்தித்தால் அவர்கள் அனல்மின்,அணுமின் நிலையங்களில் படும் பாடு கொஞ்சமாவது நியாயமாக மாறும்.ஆகவே அலுவலகத்தை விட்டு செல்லும் போது தயவு செய்து முறையாக கணிப்பொறி இயக்கத்தை நிறுத்தி நாட்டிற்கும் வீட்டிற்கும் ஒரு சிறிய பங்களிப்பை அளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன் !!!

இந்த இடுகையை எழுத காரணமாக இருந்த முன்னால் பாரத குடியரசு தலைவர் உயர்திரு. அப்துல் கலாம் அவர்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

Thursday, February 4, 2010

காங்கிரஸ் தெரிந்த பெயர் தெரியாத ரகசியங்கள்!!!

நாளை காங்கிரஸ் பொதுக்குழு (ஹா ஹா ஹா) யாரும் சிரிக்க கூடாது கூடுகிறதாம்.. அது எப்படி இருக்க போகிறதென கீழே உள்ள படத்தை பார்த்தாலே தெரியும்.. நிற்க.. நான் கூற வந்தது அது அல்ல.. வேறு சில விசயங்களும் சில கேள்விகளும்...





பெயருக்கு பின்னால் காந்தி என வால் போல வைத்திருக்கும் ராகுல் பற்றிய சில சுவாரஸ்யமான செய்திகள்..

1. ராகுல் இன்றளவும் தன் கல்லூரி படிப்பை முடிக்காதவர்.. தன் கல்லூரி படிப்பில் பாதியிலேயே விட்டுவிட்டு தன் பெயரின் பின்னால் ஏதோ பட்டத்தை சுமப்பவர்(பெயருக்கு பின் இருக்கும் காந்தி போல!!!) ..

2. ராகுலால் எந்த ஒரு கருத்து மோதலிலும் கலந்து கொண்டு சேர்ந்தாற்போல 5 நிமிடங்கள் பேச முடியாது..

3. கூட்டங்களில் பேசும் போது கூட பேப்பர் உதவியின்றி பேச முடியாது.

4. ராகுலின் அறிவுத்திறமை சராசரிக்கும் கீழ்(ஹீம்ம்ம்ம் இவரை தான் நாம் நாடள அழைக்கிறோம்!!!!)

5. இவரின் காதலி வெனுசிலா நாட்டைச்சேர்ந்த போதை மருந்து உபயோக படுத்தும் பழக்கம் உள்ளவர்..அந்த பெண்ணின் தந்தை ஒரு மாபியா கேங் தலைவர்.

6.ராகுலும் அவரது காதலியும் அமெரிக்க போலீசாரால் 2004 ஆம் ஆண்டு ஏர்போட்டில் கைது செய்யப்பட்டனர்.. அளவுக்கு அதிக பணம் வைத்திருந்ததே காரணமென கூறப்பட்டது.

7. ராகுலிக்கு இத்தாலி குடியுரிமை மற்றும் பாஸ்போட் உள்ளது,, ஏதாவது ஆச்சி ஆள் ...மீ தி எஸ்கேப்பு டு இத்தாலி :)


ஹீம்ம்ம்ம் என்ன எழுதி என்ன பிரியொஜனம் .. கொஞ்சம் விட்டா இவரை பிரதமரா கூட ஆக்கிடுவோம் இல்ல !!!


கவுண்டர் அட்டாக் : அய்யோ ராமா இத கேட்க ஆளே இல்லையா? ரெண்டு ரேசன் கார்ட் இருந்தா தப்பு, ரெண்டு வாக்காளர் அட்டை இருந்தா தப்பு அட ரெண்டு பொண்டாட்டி இருந்தா கூட தப்பு.. ஆனா இவங்கள மாதிறி ஆளுங்க மட்டும் ரெண்டு பாஸ்போட் ,ரெட்டை குடியுரிமை வச்சு இருப்பாங்களாம்!!! நான் அவங்க கிட்ட கேட்கனும் ..நீங்க தான் இந்தியாவ காப்பாத்த போறீங்கண்ணா அப்புறம் உங்களுக்கு எதுக்கு இத்தாலி குடியுரிமை? அத ரத்து பண்ணீட்டா என்ன மாதிறி ஆளுங்க எல்லாம் பேசாம இருப்போம் இல்ல !!!