நண்பர்களே.. உங்களுக்கு ஒரு சேவல், சீ ...சவால் விடுகிறேன்.. கீழ்காணும் எளிய கணக்கை எந்த வித உபகரணமும் இன்றி செய்து விடை காண வேண்டும்.. கண்டீப்பாக உங்கள் மனதிற்குள்ளேயே கணக்கை போட வேண்டும்...
* 1000 த்துடன் 40 ஐ கூட்டவும்
* அதனுடன் மீண்டும் 1000 ஐ கூட்டவும்..
* கிடைத்த விடையுடன் 30 ஐ கூட்டவும், பிறகு மீண்டும் 1000 ஐ கூட்டவும்..
* இப்போது 20 ஐ கூட்டவும்... கிடைத்த விடையுடன் 1000 ஐ கூட்டி பின் அதனுடன் 10 ஐ கூட்டவும்..
இப்போது விடை என்ன?
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
உங்கள் விடை 5000 என்றால் அது தவறு... மீண்டும் அந்த கணக்கை கால்குலேட்டர் மூலம் உபயோகித்து விடை காணவும்.. விடையை பின்னூட்டத்தில் தெரிய படுத்தவும்...
Monday, August 3, 2009
Thursday, July 30, 2009
நீங்க நல்லவரா கெட்டவரா? ஒரு எளிய சோதனை
நண்பர்களே.. நம்மில் பல பேருக்கு நாம் நல்லவரா இல்லை கெட்டவரா என்கிற குழப்பம் இருக்கும்.. அதிலும் நாம் கெட்டவர் என்பது மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருப்பார்கள்.. ஆகவே நாம் நல்லவரா இல்லையா என்பதை எளிதில் அதுவும் மற்றவர்கள் அறியாமல் தெரிந்து கொள்ள இதோ இங்கே ஒரு சின்ன சோதனை..
வாங்க நண்பர்களே.. நம்ம பக்கத்திற்கு வர்றவங்க எல்லாருமே நல்லவங்க தான்.. அதானால நீங்களும் நல்லவங்களே !!!
கவுண்டர் : நான் நல்லவனுங்க.. சத்தியமா நான் நல்லவனுங்க.. அய்யோ நான் நல்லவனுங்க...
வாங்க நண்பர்களே.. நம்ம பக்கத்திற்கு வர்றவங்க எல்லாருமே நல்லவங்க தான்.. அதானால நீங்களும் நல்லவங்களே !!!
கவுண்டர் : நான் நல்லவனுங்க.. சத்தியமா நான் நல்லவனுங்க.. அய்யோ நான் நல்லவனுங்க...
Wednesday, July 29, 2009
நானும், ஆந்திரா மெஸ்ஸும் , ஒரு ஃபுல் மீல்ஸும்...
நேற்று காலை அம்மிணியுடன் ஒரு சின்ன தகறாரு( ஆமா பெரிய வாய்க்கா தகறாரு என கேட்பது காதில் விழுகிறது) .. வாய்கா தகறாரெல்லாம் இல்லீங்க , வாய் தான் தகறாரு.. அதனால கோவத்தோடு காலையில சாப்பிடாம , மதியமும் சாப்பாடு கொண்டு போகாம ஆஃபீஸ் போயிட்டேன்..
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்னு சொல்லுவாங்க, எனக்கு பசின்னு நெனச்சாலே எல்லாம் போயிடும்.. அதனால காலையில கோவத்துடன் தி.நகர் உடுப்பி ஓட்டலில் ஒரு பொங்கல், வடை, கேசரி என அளவாக சாப்பிட்டு ஆஃபீஸ் போனேன்.. மதியம் சுமார் மூணு மணிக்கு சாப்பாடு சாப்பிடலாம்னு பக்கத்திலிருந்த ஒரு ஆந்திரா மெஸ் போனேன்..
ஆந்திரா மெஸ் போனதும் எனக்கு என்னுடைய பழைய நினைவுகள்.. என்னை இந்த அளவுக்கு வளர்த்தி விட்ட ஹைதராபாத் சாப்பாடு நினைவுக்கு வந்தது... ஆந்திரா சாப்பாடு என்றால் சில ஐட்டங்கள் கண்டீப்பாக இருக்கும், அவை பருப்பு பொடி எண்ணை, ஏதாவது ஒரு காய் பொறியல், ஒரு கூட்டு, காரமான ஒரு துவையல், கெட்டியான பருப்பு, தயிர், ஒரு ஊறுகாய் இருக்கும்..
அதுவும் நான் ஹைதியில் சாப்பிடும் மெஸ்ஸில் எல்லாம் அன் லிமிட்டெட் தான்.. எல்லாம் என்றால் எல்லாமே.. பருப்பு பொடி, எண்ணை, பொறியல், கூட்டு, என அனைத்தும் ஒவ்வொரு மேசைக்கும் தனித்தனியாக வைக்கப்படிருக்கும், நமக்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.. அதுவும் அங்கு தரப்படும் தயிர் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.. அங்கே தயிர் கிண்ணத்தில் தர மாட்டார்கள், ஒரு பெரிய சட்டியில் எடுத்து வந்து வெட்டி போடுவார்கள்(எப்படி தான் கட்டுபடியாகிறதோ!!!)..அதுவும் இன்னும் வேணுமா, வேணுமா எனக் கேட்டு.. முழு சாப்பாட்டின் விலையும் அவ்வளவு ஒன்றும் அதிகம் இல்லை.. 32 ரூபாய் தான்,,
ஆக, இப்படி சாப்பிட்டு சாப்பிட்டு , ஓரளவுக்கு பெரிய ஆளாயி என் வீட்டிற்கு வந்தேன்.. வழக்கம் போல என் அம்மா என்னப்பா எளச்சு போயிட்டே எனக்கேட்டார் !!! ஹி ஹி ஹி என சமாளித்தபடி வீட்டில் எல்லோரையும் பயப்படுத்தி விட்டு , ஒரு சின்ன வேலையாக டைலர் கடைக்கு சென்றேன்...அங்கே அவரிடம் என்னண்ணே துணி தைச்சு இருக்கீங்க? பாருங்க உயரம் பத்தல என சொன்னேன்... அவரும் அப்படியா , இருக்காதே என சொல்லி அளந்தார்.. பேண்டின் உயரம், சரியாக தான் இருந்தது.. பிறகு தனது நோட்டை புரட்டி அளவை சரி பார்த்து சொன்னார்.. தம்பி உயரம் குறையல உங்க இடுப்பு அதிகமாயிடுச்சு அதனால தான்.. நீங்க உங்க இடுப்பை குறைக்கறீங்களா இல்ல பேண்டின் உயரத்தை அதிகரிக்கவா எனக்கேட்டார்.. அவர் கேட்டது எனக்கு கோபத்தை வர வைத்து.. ஆனால் அவருடைய அந்த டீல் ரொம்ப பிடித்து...எனவே பேண்டின் உயரத்தை அதிகரிக்க சொல்லி வந்தேன்..
இப்படி பெருமை மிக்க ஆந்திரா மெஸ்ஸை நினைத்து சாப்பிட அமர்ந்தேன்.. இங்கேயும் அதே மெனு ஆனால் சற்று சுவை குறைவாக, தயிரும் அளவாக.. தயிர் என்றதும் எனக்கு நியாபகம் வருபது.. அந்த தயிருடன் சர்க்கரை கலக்கி சாப்பிடும் பழக்கம்.. அதை இந்த ஆந்திரா மெஸ்ஸில் இருந்து தான் கற்றேன்.. ஆக நன்றாக சாப்பிட்டு விட்டு அலுவலகம் திரும்பி பின் வீட்டிற்கும் சென்றேன்...
வீட்டில் சாப்பாடு ரெடியாக இருந்தது.. ஆனால் பசி இல்லாததால்(கோவமாம்) எதுவும் சாப்பிடாமல் தூங்கி விட்டேன்
கவுண்டர் : மகா ஜனங்களே.. பாருங்கய்யா இந்த அநியாயத்த.. ஒருத்தன் அன் லிமிட்டெட் மீல்ஸ மூணு மணிக்கு சாப்பிட்டு நைட் வரைக்கும் பசி எடுக்கலேண்ணா எந்த அளவுக்கு சாப்பிட்டு இருப்பான்? இவன மாதிறி ரெண்டு பேர் போதும் அந்த கடைய காலி பண்ணீட்டு அவங்கள அப்படியே திருப்பதி அனுப்பிடுவான்.. பாருங்க , தெரிஞ்ச பையன் ஊரு பக்கம் வந்தா சாப்பாடு போடுலாம்னு மட்டும் தப்பி தவறி கூப்புராதீங்க.. அப்புரம் உங்க கதி அதோ கதி தான் ...
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்னு சொல்லுவாங்க, எனக்கு பசின்னு நெனச்சாலே எல்லாம் போயிடும்.. அதனால காலையில கோவத்துடன் தி.நகர் உடுப்பி ஓட்டலில் ஒரு பொங்கல், வடை, கேசரி என அளவாக சாப்பிட்டு ஆஃபீஸ் போனேன்.. மதியம் சுமார் மூணு மணிக்கு சாப்பாடு சாப்பிடலாம்னு பக்கத்திலிருந்த ஒரு ஆந்திரா மெஸ் போனேன்..
ஆந்திரா மெஸ் போனதும் எனக்கு என்னுடைய பழைய நினைவுகள்.. என்னை இந்த அளவுக்கு வளர்த்தி விட்ட ஹைதராபாத் சாப்பாடு நினைவுக்கு வந்தது... ஆந்திரா சாப்பாடு என்றால் சில ஐட்டங்கள் கண்டீப்பாக இருக்கும், அவை பருப்பு பொடி எண்ணை, ஏதாவது ஒரு காய் பொறியல், ஒரு கூட்டு, காரமான ஒரு துவையல், கெட்டியான பருப்பு, தயிர், ஒரு ஊறுகாய் இருக்கும்..
அதுவும் நான் ஹைதியில் சாப்பிடும் மெஸ்ஸில் எல்லாம் அன் லிமிட்டெட் தான்.. எல்லாம் என்றால் எல்லாமே.. பருப்பு பொடி, எண்ணை, பொறியல், கூட்டு, என அனைத்தும் ஒவ்வொரு மேசைக்கும் தனித்தனியாக வைக்கப்படிருக்கும், நமக்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.. அதுவும் அங்கு தரப்படும் தயிர் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.. அங்கே தயிர் கிண்ணத்தில் தர மாட்டார்கள், ஒரு பெரிய சட்டியில் எடுத்து வந்து வெட்டி போடுவார்கள்(எப்படி தான் கட்டுபடியாகிறதோ!!!)..அதுவும் இன்னும் வேணுமா, வேணுமா எனக் கேட்டு.. முழு சாப்பாட்டின் விலையும் அவ்வளவு ஒன்றும் அதிகம் இல்லை.. 32 ரூபாய் தான்,,
ஆக, இப்படி சாப்பிட்டு சாப்பிட்டு , ஓரளவுக்கு பெரிய ஆளாயி என் வீட்டிற்கு வந்தேன்.. வழக்கம் போல என் அம்மா என்னப்பா எளச்சு போயிட்டே எனக்கேட்டார் !!! ஹி ஹி ஹி என சமாளித்தபடி வீட்டில் எல்லோரையும் பயப்படுத்தி விட்டு , ஒரு சின்ன வேலையாக டைலர் கடைக்கு சென்றேன்...அங்கே அவரிடம் என்னண்ணே துணி தைச்சு இருக்கீங்க? பாருங்க உயரம் பத்தல என சொன்னேன்... அவரும் அப்படியா , இருக்காதே என சொல்லி அளந்தார்.. பேண்டின் உயரம், சரியாக தான் இருந்தது.. பிறகு தனது நோட்டை புரட்டி அளவை சரி பார்த்து சொன்னார்.. தம்பி உயரம் குறையல உங்க இடுப்பு அதிகமாயிடுச்சு அதனால தான்.. நீங்க உங்க இடுப்பை குறைக்கறீங்களா இல்ல பேண்டின் உயரத்தை அதிகரிக்கவா எனக்கேட்டார்.. அவர் கேட்டது எனக்கு கோபத்தை வர வைத்து.. ஆனால் அவருடைய அந்த டீல் ரொம்ப பிடித்து...எனவே பேண்டின் உயரத்தை அதிகரிக்க சொல்லி வந்தேன்..
இப்படி பெருமை மிக்க ஆந்திரா மெஸ்ஸை நினைத்து சாப்பிட அமர்ந்தேன்.. இங்கேயும் அதே மெனு ஆனால் சற்று சுவை குறைவாக, தயிரும் அளவாக.. தயிர் என்றதும் எனக்கு நியாபகம் வருபது.. அந்த தயிருடன் சர்க்கரை கலக்கி சாப்பிடும் பழக்கம்.. அதை இந்த ஆந்திரா மெஸ்ஸில் இருந்து தான் கற்றேன்.. ஆக நன்றாக சாப்பிட்டு விட்டு அலுவலகம் திரும்பி பின் வீட்டிற்கும் சென்றேன்...
வீட்டில் சாப்பாடு ரெடியாக இருந்தது.. ஆனால் பசி இல்லாததால்(கோவமாம்) எதுவும் சாப்பிடாமல் தூங்கி விட்டேன்
கவுண்டர் : மகா ஜனங்களே.. பாருங்கய்யா இந்த அநியாயத்த.. ஒருத்தன் அன் லிமிட்டெட் மீல்ஸ மூணு மணிக்கு சாப்பிட்டு நைட் வரைக்கும் பசி எடுக்கலேண்ணா எந்த அளவுக்கு சாப்பிட்டு இருப்பான்? இவன மாதிறி ரெண்டு பேர் போதும் அந்த கடைய காலி பண்ணீட்டு அவங்கள அப்படியே திருப்பதி அனுப்பிடுவான்.. பாருங்க , தெரிஞ்ச பையன் ஊரு பக்கம் வந்தா சாப்பாடு போடுலாம்னு மட்டும் தப்பி தவறி கூப்புராதீங்க.. அப்புரம் உங்க கதி அதோ கதி தான் ...
Subscribe to:
Posts (Atom)
