}

Tuesday, July 28, 2009

இவர்கள் என் நண்பர்கள் என்பதில் எனக்கு பெருமை...

சிங்கத்தை யாரும் கொஞ்ச முடியாது
எங்கள் நட்பை யாரும் மிஞ்ச முடியாது...


உன் நண்பர்கள் யாரென சொல் பிறகு
நீ யாரென சொல்கிறேன்


அப்புறம்...... நண்பன் ......

சரி சரி போதும்.. எதுக்கு இந்த பில்டப் என்றால் . இன்றைக்கு , நமது பதிவுலக புகழ்( எப்படியோ விருது குடுத்ததற்கு ஐஸ் வச்சாச்சு) இயற்கை மகள் மற்றும் நம்ம சமையல் உலக ராணி அக்கா மேனகாவும் (அப்பாடா அடுத்த தடவ இந்தியா வர்ரப்போ சாப்பாடு நிச்சயம்) எனக்கு ஒரு விருதை அளித்து கவுரவித்துள்ளார்கள்.. அதை நான் இன்னும் பத்து பேருக்கு தர வேண்டுமாம்.. அதான்...... மக்களே தயவு செய்து இந்த விருதை வாங்கிக்கொள்ளுங்கள்...








தாயே ஜக்கம்மா.. இந்த விருதை வாங்காதவங்க பக்கம் யாரும் போகக்கூடாது, அப்படி உன் வாக்க மீறி போறவங்கள நீயே பாத்துக்கம்மா....


1. பெஸ்கி - எவனோ ஒருவன்

2. கீதா ஆச்சல் - என் சமையல் அறையில்

3. ஜோ -- வாழ்க்கை போகிறது (மொழியாக்கம் சரி தானே)

4. சந்ரு - சந்ருவின் பக்கங்கள்..

5. சப்ராஸ் அபூ பக்கர்

6. சிவனேசு - தமிழ்ப்பூங்கா

7.ஜலீலா - ஜலீலாவின் பயனுள்ள டிப்ஸ்கள்

8. பிரியங்கா - என் கிறுக்கல்கள்

9. அம்மு - அம்முவின் சமையல் குறிப்புகள்

10.சூரியன் -- சூரியன்

10. சம்பத்

10. நாணல்

10. இரசிகை

10. நான் ஆதவன் - குப்பைத்தொட்டி(ஆனால் உள்ளிருப்பதோ வைரங்கள்)

10. சிந்து

10. ஜோதி

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்

10. சுபா - என் உலகம்




வாழ்க்கையில நிறைய விசயம் நமக்கு பிடிக்காம இருக்கும்,

படிக்கிறப்போ பாடமும். பரிட்சையும் பிடித்திருக்காது,
படிச்சு முடிச்சப்போ வேலை தேடவும், கேள்விக்கு பதில் சொல்லவும் புடிச்சிருக்காது,
காதலிக்கிறப்போ அவங்க அண்ணனையும், நம்ம அப்பாவையும் புடிச்சிருக்காது,
வேலை செய்ரப்போ நம்ம மேனேஜரையும், குடுக்கிற வேலையையும் புடிக்காது
கல்யாணத்துக்கு அப்புறம் எதையுமே புடிக்காது

ஆனா இதெல்லாம் புடிக்கலேண்ணாலும் அனுபவிச்ச மாதிறி

இதையும் வாங்கிக்கீங்க ஸ்சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்





அப்புறம் விருது கொடுத்ததோட நிருத்த போரதில்லை.. இவர்களின் நல்ல பதிவுகளை பற்றி வரும் பதிவுகளில் காண்போம்...

கவுண்டர் : மக்களே.. இவன் கிட்ட இப்போ எழுதறதக்கு சரக்கு எதுவும் இல்லை.. அதான் இப்படி டகால்டி விடுரான்.. நம்ம்பீராதிங்க...

48 பதிலடிகள்...:

*இயற்கை ராஜி* said...

mm..anaivarukkum vaalthukkal:-)

Anonymous said...

ஹாய் ராஜ்,

எனக்கு சின்ன வயதிலுருந்தே குடுகுடுப்பாண்டினா ரொம்ப பயம் நீங்க வேற என் ப்ளாக்குல "இந்த லிங்க்குக்கு வராட்டி ஜக்கம்மா கோவத்துக்கு ஆளாவீங்கனு பயமுடுதிட்டீங்க...அடிச்சு புடிச்சு வந்து பாத்தா விருது குடுத்ததை தெரியப்படுத்துவதற்கு இப்டியா பயம் காட்டுவேங்க?உங்களிடம்மிருந்து விருது வாங்கியது குறித்து மிக்க மகிழ்ச்சி...

அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com

குறை ஒன்றும் இல்லை !!! said...

//mm..anaivarukkum vaalthukkal:-)//

வாங்க இயற்கை.. நன்றி..

குறை ஒன்றும் இல்லை !!! said...

///ஹாய் ராஜ்,

எனக்கு சின்ன வயதிலுருந்தே குடுகுடுப்பாண்டினா ரொம்ப பயம் நீங்க வேற என் ப்ளாக்குல "இந்த லிங்க்குக்கு வராட்டி ஜக்கம்மா கோவத்துக்கு ஆளாவீங்கனு பயமுடுதிட்டீங்க...அடிச்சு புடிச்சு வந்து பாத்தா விருது குடுத்ததை தெரியப்படுத்துவதற்கு இப்டியா பயம் காட்டுவேங்க?உங்களிடம்மிருந்து விருது வாங்கியது குறித்து மிக்க மகிழ்ச்சி...

அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com//

வாங்க அம்மு.. நன்றி. ஹி ஹி இல்லேனா யாரும் எட்டி பாக்க மாட்டீங்கல்ல?

GEETHA ACHAL said...

மிகவும் நன்றி அண்ணா....அம்மு சொல்லுவது போல இப்படியா எங்களை எல்லாம் பயம்முறுத்துவது...சின்ன பசங்க நாங்க...

குறை ஒன்றும் இல்லை !!! said...

//சின்ன பசங்க நாங்க...//

வாங்க கீதா.. இது உங்களுக்கே ஓவரா தெரியல????

sivanes said...

குறை ஒன்றும் இல்லை : "ரொம்ப நல்லவன்னு என்னை யாரவது சொன்னா நானே நம்ப மாட்டேன் !!!!"

வேற் வ‌ழியே இல்லை நண்பா, இதை நான் சொல்லியே ஆகவேண்டிய காலத்தின் கட்டாயத்தில், எனக்கு விருது கொடுத்துட்டீங்களே! நீங்க ரொம்ப! ரொம்ம்ப்ப்ப நல்லவருய்யா :))))))))))))))‌

குறை ஒன்றும் இல்லை !!! said...

//நீங்க ரொம்ப! ரொம்ம்ப்ப்ப நல்லவருய்யா :))))))))))))))‌///

வாங்க சிவனேசு.. நன்றி.. இந்த பாராட்ட வாங்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு...

சம்பத் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் நண்பர்களே

குறை ஒன்றும் இல்லை !!! said...

//அனைவருக்கும் வாழ்த்துக்கள்./
நன்றி சம்பத்..

//வாழ்த்துகள் நண்பர்களே//
நனறி ஞானசேகரன்..

Jaleela Kamal said...

என்ன வோ ஏதோ கிச்சனில் பாதி வேலையோடு ஓடி வந்தேன், எம்மாடி இபப்டியா பயம் புடுத்துவது ஒன்று தெரியுமா ஜக்கம்மா வந்து என்னை பார்த்தா அய்யோ என்னை விட பெரிய ஜக்கமா இங்கு இருக்குன்னு ஓடி போய்விடுவாங்க ஹிஹி (பில்டிங் ஸ்ராங்)

(எம்மா இருந்தாலும் உள்ளுக்குள்ள ஒரு பயம் தேன் ஜக்கம்மாவை பற்றி குறை ஒன்றும் இல்லை நீங்க ரொம்ப நல்லவரு.... (வடிவேலு) நான் ஒன்னுமே சொல்லல‌)பேஸ்மெண்ட் வீக் அவ அவ் அவ்வ்வ்வ்வ்வ்.....


ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம் என்ன‌ பா அவார்டு மேல‌ அவ‌ர்டா... இதேன்ன‌ அவ‌ர்டு வார‌மா?


ச‌ரி இப்ப‌வே க‌ண்ண‌ க‌ட்டுது...ஜ‌க்க‌மா நான் பதில் போட்டுட்டே ச‌ரியா

Jaleela Kamal said...

ஓ இங்க‌ எல்ல‌மே ஜ‌க்க‌ம்மா சொல்ப‌டி தான் ந‌ட‌க்குது ஆகா டைம் இல்லையே முழுவ‌தும் ப‌டிக்க‌ எங்க‌ போய்ட‌போறோம் வாரோம் கொஞ்ச‌ம் கொஞ்மா

தினேஷ் said...

ஏண்ணே இப்படி.. அலறி அடிச்சிட்டு வர்றேன்..

ரொம்ப சந்தோசம் , உங்க விருத ஏத்துக்கிட்டாச்சு.
ஜக்கம்மா இனி நிரைய பின்னூட்டங்களையும் , ஹிட்ஸுகளையும் வழங்கி அருள் புரியுமாண்ணே..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//என்ன வோ ஏதோ கிச்சனில் பாதி வேலையோடு ஓடி வந்தேன், எம்மாடி இபப்டியா பயம் புடுத்துவது ஒன்று தெரியுமா ஜக்கம்மா வந்து என்னை பார்த்தா அய்யோ என்னை விட பெரிய ஜக்கமா இங்கு இருக்குன்னு ஓடி போய்விடுவாங்க ஹிஹி//

வாங்க ஜலீலா..
அய்யய்யோ..அப்போ அவரோட கதி.. பாவம்..

//ஓ இங்க‌ எல்ல‌மே ஜ‌க்க‌ம்மா சொல்ப‌டி தான் ந‌ட‌க்குது ஆகா டைம் இல்லையே முழுவ‌தும் ப‌டிக்க‌ எங்க‌ போய்ட‌போறோம் வாரோம் கொஞ்ச‌ம் கொஞ்மா//

வாங்க இது என்ன பேங்கா ஏழு மணிக்கு மேல பூட்ட.. தாராளமா வரலாம்..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//ஏண்ணே இப்படி.. அலறி அடிச்சிட்டு வர்றேன்..

ரொம்ப சந்தோசம் , உங்க விருத ஏத்துக்கிட்டாச்சு.
ஜக்கம்மா இனி நிரைய பின்னூட்டங்களையும் , ஹிட்ஸுகளையும் வழங்கி அருள் புரியுமாண்ணே..//

வாங்க சூரியன்.. அது ஜக்கமமா கையில இல்லை.. உங்க கையில இருக்கு!!!

Menaga Sathia said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

சிநேகிதன் அக்பர் said...

செல்லாது! செல்லாது!! இன்னும் இருபது பேர் குறையுது.

//ஜோ -- வாழ்க்கை போகிறது (மொழியாக்கம் சரி தானே)//

போய்க்கொண்டு இருக்கிற‌து.

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

jothi said...

மிக்க நன்றி குறை ஒன்றும் இல்லை.

எனக்கு யாராச்சும் இந்த விருது கொடுத்தா உங்களுக்கு கொடுக்கலாம்னு இருந்தேன். ஆனால் நீங்க முந்திட்டிங்க,..

அனைவருக்கும் வாழ்த்துக்கள் நண்பர்களே,..

ஏதோ ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல எனக்கு கடைசியா ஒரு விருது கிடைச்சிடுச்சுப்பா,.. கண்டிப்பாக நான் அதிர்ஷ்டகாரன் தான்.

மீண்டும் மிக்க நன்றி குறை ஒன்றும் இல்லை.

Admin said...

இப்படியுமா......

என்னவோ எதோ என்று ஓடி வந்தேன். வந்ததும் சந்தோசத்த அப்படியே தனதுடடிங்க முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள்...... அப்புறம் நன்றிகள் ஏனைய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்....

நீங்க நட்பின் விருது தந்ததில குறை ஒன்றும் இல்லை......

குறை ஒன்றும் இல்லை !!! said...

//அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!//
வாங்கக்கா.. நன்றி.

குறை ஒன்றும் இல்லை !!! said...

//விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

வாங்க அக்பர் நன்றி..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//ஏதோ ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல எனக்கு கடைசியா ஒரு விருது கிடைச்சிடுச்சுப்பா,.. கண்டிப்பாக நான் அதிர்ஷ்டகாரன் தான்//

கவுண்டர் : ஓ கடைசியா பேர் வந்ததுக்கா? அட ஆலையில ஓடர கரும்புல அடிக்கரும்பா இருந்தா என்னா நுனிக்கரும்பா இருந்தா என்ன? நமக்கு வேண்டியது வெல்லந்தானே????

குறை ஒன்றும் இல்லை !!! said...

//நீங்க நட்பின் விருது தந்ததில குறை ஒன்றும் இல்லை......//

வாங்க சந்ரு .. நன்றி..

Subha said...

எனக்கு விருதுகளை அள்ளி அள்ளி கொடுக்கும் நண்பர் பாரி வள்ளலுக்கு என் மனமார்ந்த நன்றி..நிறைய எழுதுங்கப்பா..

Joe said...

Thanks, mate!

குறை ஒன்றும் இல்லை !!! said...

//எனக்கு விருதுகளை அள்ளி அள்ளி கொடுக்கும் நண்பர் பாரி வள்ளலுக்கு என் மனமார்ந்த நன்றி..நிறைய எழுதுங்கப்பா..//

வாங்க சுபா.. நன்றி..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//Thanks, mate!//

வாங்க ஜோ .. நன்றி..

☀நான் ஆதவன்☀ said...

வந்துட்டேன்.... விருதுக்கு ரொம்ப நன்றி ராஜ்.

Beski said...

விருது கொடுத்ததற்கு நன்றி ராஜ்.
---
திரும்பவும் நம்ம பேர மொதல்ல போட்டீங்களே... நமக்கு கடைசி பெஞ்சுல ஒக்காந்தே பழக்கமாகிப்போச்சு. கொஞ்சம் கூச்சமா இருக்கு.
---
பின்னூட்டத்துக்குதான் ஜக்கம்மாவ விட்டு மெரட்டுறீய, இதுக்குமா?

Anbu said...

viruthu petravarkaluku valthukkal

சப்ராஸ் அபூ பக்கர் said...

என் வலையில் மிரட்டி இருந்ததப் பார்த்து (அதுல ஜக்கம்மா வேற....) ஓடோடி வந்தால் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என்னையும் உங்களுடைய நட்பின் வலையில் இணைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இனி என்ன? இணைவோம் உறவுப் பாலத்தில்....

விருது வழங்கிய உங்களுக்கும், விருது பெற்ற ஏனைய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

(இனி ஏதாவது தகவல் சொல்றதுன்னா மிரட்டல் எதுவும் இல்லாம கூலா சொல்லுங்க. அத மீறி திரும்பவும் மிரட்டிநீங்க..... அப்புறம் எடா குடம் தான்.... ஹி.... ஹி.... லொள்..... )

priyanka said...

விருது கொடுத்தது ரொம்ப சந்தோஷம்ங்க!!

ஆனா, இத மாறி ஜக்கம்மா பேர சொல்லி லாம் தயவு செஞ்சி பயமுறுத்தாதீங்க.. உங்களுக்கே பாவமா இல்ல எங்களைல்லாம் பாத்தா...??

பாருங்க எல்லாரும் எப்டி அலறி அடிச்சிக்கிட்டு ஓடியாந்திருக்காங்க?!! ;-)

Joe said...

மிக்க நன்றி நண்பரே.

"உற்ற நண்பர்" உங்க பேரு என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?

//
கவுண்டர் : மக்களே.. இவன் கிட்ட இப்போ எழுதறதக்கு சரக்கு எதுவும் இல்லை.. அதான் இப்படி டகால்டி விடுரான்.. நம்ம்பீராதிங்க...
//

அது சரி, இங்க யாருக்கு தான் பெருசா சரக்கு இருக்கு? ஏதோ கிறுக்கித் தள்ளிட்டு இருக்கோம்.

கார்த்திக் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

//அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//
வாங்க கார்த்திக் நன்றி..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//வந்துட்டேன்.... விருதுக்கு ரொம்ப நன்றி ராஜ்.//
வாங்க ஆதவன் நன்றி..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//திரும்பவும் நம்ம பேர மொதல்ல போட்டீங்களே... நமக்கு கடைசி பெஞ்சுல ஒக்காந்தே பழக்கமாகிப்போச்சு. கொஞ்சம் கூச்சமா இருக்கு.//

வாங்க பெஸ்கி நன்றி..
அட ஆலையில ஓடர கரும்புல அடிக்கரும்பா இருந்தா என்னா நுனிக்கரும்பா இருந்தா என்ன? நமக்கு வேண்டியது வெல்லந்தானே????

குறை ஒன்றும் இல்லை !!! said...

//viruthu petravarkaluku valthukkal//
வாங்க அன்பு. நன்றி

குறை ஒன்றும் இல்லை !!! said...

//இனி ஏதாவது தகவல் சொல்றதுன்னா மிரட்டல் எதுவும் இல்லாம கூலா சொல்லுங்க. அத மீறி திரும்பவும் மிரட்டிநீங்க..... அப்புறம் எடா குடம் தான்...//

வாங்க சப்ராஸ் அபூ பக்கர் .. பாத்துக்கலாம் :)

குறை ஒன்றும் இல்லை !!! said...

//ஆனா, இத மாறி ஜக்கம்மா பேர சொல்லி லாம் தயவு செஞ்சி பயமுறுத்தாதீங்க.. உங்களுக்கே பாவமா இல்ல எங்களைல்லாம் பாத்தா...??//

வாங்க பிரியங்கா .. இல்லேண்ணா நம்ம ஆளுகள வர வைக்க முடியாதே??

Radhakrishnan said...

ஹா ஹா! நன்றாக இருக்கிறது உங்கள் வேண்டுதல்.

விருதுபெற்ற தங்களுக்கும், விருது பெறுபவர்களுக்கும் வாழ்த்துகள்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

//ஹா ஹா! நன்றாக இருக்கிறது உங்கள் வேண்டுதல். //

வாங்க வெ.இராதாகிருஷ்ணன் .. நன்றி.. இல்லேண்ணா யாரும் வாங்க மாட்டாங்க அதான்..

சம்பத் said...

ராஜ், விருதுக்கு மிக்க நன்றி...நீங்கள் என் நண்பன் என்பதி எனக்கு பெருமை நண்பா...

இரசிகை said...

remba santhosham...nantriyum koodave:)

ithu yenakku 2 nd time kidaikkuthu.

unga blog kku ithu thaan first time vaarren..
blog "kurai ontrum illai" name nallaa irukku.

petra pira pathivarkalukkum vaazhththukal...

10...10..10..10.. nu type seithiruntha vitham azhagu:)

குறை ஒன்றும் இல்லை !!! said...

remba santhosham...nantriyum koodave:)

வாங்க இரசிகை.. நன்றி..

//unga blog kku ithu thaan first time vaarren..//

கவுண்டர் : ஏன் வந்தம்னு இருக்குங்களா?

//10...10..10..10.. nu type seithiruntha vitham azhagu:)//

நன்றிங்க..

நாணல் said...

நன்றி நண்பரே... அனைவருக்கும் என் நண்பர்கள் தின வாழ்துக்கள்..

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க நாணல்.. நன்றி..

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!