என் புருசனும் கச்சேரிக்கு போனான் என்ற கதையாய் நானும் பதிவெழுதுகிறேன் என்றாகி விடுமோ என்கிற கவலை எனக்கு.. அதால் தான் செந்தில் அண்ணன் உதவியுடன் கவுண்டமணி அண்ணனிடம் ஐடியா கேட்கப்போகலாம் என்று வந்தேன்.. பிறகு நீங்களே பாருங்கள்..
செந்தில் : அண்ணே .. அண்ணே ... என்னண்ணே பண்றீங்க?
கவுண்டர் : வாடா பேரிக்கா தலையா...அது வேற ஒண்ணும் இல்லடா கோமுட்டி தலையா, வீட்ட ரெண்டு இன்ச் தள்ளி வைக்கலாம்னு முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.. வந்துட்டான் என்ன பண்றீங்கனு ஏது பண்றீங்கன்னு கேட்டுது..
செந்தில் : அதில்லேண்ணே.. உங்கள பாக்கறதுக்கு ஒருத்தர் வந்து இருக்கார்.. உங்க கிட்ட ஏதோ ஐடியா கேட்கணுமாம்..
கவுண்டர் : யார்ரா அது? அவன் என்ன பெரிய அமேரிக்கா ஜனாதிபதியா ..வரச்சொல்லுடா..
செந்தில் : வாங்க குறை ஒன்றும் இல்லை ..
கவுண்டர் : : என்னது குறை ஒண்ணும் இல்லையா? யார்ரா அவன் குறையில்லாம இருக்கிறவன்.. வரச்சொல்லு அவன..
குஒஇ : வணக்கமுங்க .. நான் தானுங்க அது..
கவுண்டர் : ஓ நீ தானா அது.. என்ன வேணும்? நீ என்ன பண்ற?
செந்தில் : அவர் பதிவருங்க..
கவுண்டர் : பதிவரா? ஓ சார் ரெஜிஸ்டரர் ஆபீஸ்ல வேலை பாக்குறாரா?இல்லே ஏதாவது யுனிவர்சிட்டியில் வேலை பாக்கிறாரா?
செந்தில் : அண்ணே அந்த பதிவர் இல்லேண்ணே.. இது ப்லாக் ..
கவுண்டர் : ஓ.. அந்த பதிவரா? நாட்டுல இந்த பதிவருங்க தொல்லை தாங்க முடியலப்பா.. புண்ணாக்கு விக்கிறவன்,குண்டூசி விக்கிறவன் எல்லாம் பதிவராம்.. அட அப்படியே இருந்தாலும் ஒழுங்கா எழுதி ஒண்ணாவ இருக்கீங்க? ஏதோ ஒண்ணங்கிளாஸ் பசங்க மாதிறி அவன் என் பென்சிலை திருடீட்டான் , இவன் என்ன கிள்ளி வச்சுட்டான்னு ஒரே சண்டை.. நீங்க எல்லாம் படிச்சவங்களா?
குஒஇ : அது வேற ஒண்ணும் இல்லீங்க.. நீங்க செந்தில் அண்ணனை உதச்சி பிரபலமாயிட்டீங்க.. நானும் இந்த பதிவு எழுதி......
கவுண்டர் : பதிவு எழுதி?????????? பிரபலமாகலாம்னு பாத்தியாக்கும்? நீ பிரபலமாகுறியோ இல்லியோ மத்தவங்களுக்கு ப்ராப்லமாகாம இரு அது போதும்..
குஒ இ: இல்லேண்ணே ஏதாவது ஐடியா இருந்தா..
செந்தில் : அண்ணே வேணும்னா உலகத்திரைப் படம் பத்தி விமர்சனம் எழுதச்சொல்லலாமா?
கவுண்டர் : க்கும்ம்ம். உள்ளூர் திரைப்படத்துக்கே இங்க வக்கு இல்லை. இதுல உலகத்திரைப்படம்.. அது எல்லாம் வேணாம் ராஜா.. அதுல அப்படி என்ன எழுவே? பாக்க வேண்டியத நல்லா பாத்துட்டு அப்புறம் அந்த டைரக்டர் அப்படி சொல்லி இருக்காரு, இப்படி சொல்லி இருக்காருணு நாமலே ஒரு கதை சொல்ல வேண்டியது ஏன்னா யார் அத போய் பாக்க போராங்க .. அட அனகொண்டாவ பாத்துட்டு பெண் பாம்பு பழிவாங்குதுண்ணு சொன்னாலும் சொல்லுவீங்க..
செந்தில் : இல்லேண்ணா யாராவது பிரபலமான பதிவர வம்பு சண்டைக்கு கூப்பிட்டு..
கவுண்டர் : யார்ரா பிரபலம்? இங்கே யாரும் பிரபலம் இல்லே.. இதுல எல்லாம் சமம் தான்.. நீ வேணா போய் பாரு நீ சொல்ர பிரபலத்தோட பழைய பதிவுகல.. யாரும் எட்டி பாத்திருக்க மாட்டாங்க..அப்படியே இருந்தாலும் அந்த பொலப்பு உனக்கு தேவையா?
செந்தில் : போங்கண்ணே... அப்புறம் தமிழ்மணத்தில எப்படி ஓட்டு வாங்குறது? சூடான இடுகையா எப்படி இருக்கிறது?
கவுண்டர் : தமிழ்மணமா? அது உன்ன விட நாத்தம் புடிச்ச இடம்டா.. அங்கே எல்லாம் ஓட்டு வாங்க நல்ல எழுத்து தேவையில்ல... வேற ஒண்ணு வேணும்.. ஆமா தமிழ்மணம் என்ன ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியா? அது பட்டம் குடுத்தா தான் நீ வாங்குவியா?
குஒ இ : அப்போ வேற என்ன பண்ண?
கவுண்டர் : உம்ம்ம்ம். வேணா கலைக்டர் ஆஃபிஸ்ல போய் ஃப்ல்ல கையெழுத்து போடு.. கேட்குறான் பாரு.. போ போய் உருப்படுர வழி இருந்தா பாரு.. வந்துட்டான். பெருசா.. ஆளையும் மண்டையையும் பாரு..
கு ஒ இ : சரிண்ணே..
ஆம்.. நண்பர்களே. இதுவே என் கடைசி இடுகையாகும்.. ஏனோ மேலும் எழுத மனமும் நேரமும் ஒப்பவில்லை.. இதுவரை ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி..
Wednesday, July 15, 2009
Friday, July 10, 2009
வண்ணத்துப் பூச்சி(தகுதியாக இருந்தால் ஏதாவது போட்டிக்கு ஏற்றுக்கொள்ளவும்..)
அது வாயிலிருந்து வெள்ளையாய் கக்கியது. கக்கும் பொழுது மிக சிரமப்பட்டு முகத்தை சுழித்தது. உடம்பை வளைக்க முயன்று முடியாமல் மெலிதாய் அசைந்தது. அதன் இயலாமை அவளை வெகுவாக பாதித்தது.
அதைப் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தாள். என்ன செய்தும் அவளால் கட்டுப்படுத்த இயலவில்லை. அப்படியே சலீமின் தோளில் விழுந்து அழுதாள். "என்னாலதானே இதெல்லாம்..?"
கிட்டதட்ட அவனும் அழுது விடும் நிலையில்தான் இருந்தான்.இருந்தும் காட்டிக் கொள்ளாமல் அவளைத் தேற்றினான்.
"அதான் ஒன்னும் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டா§ர.. அப்புறமும் ஏன் அழற..?"
அவனுடைய பேச்சு சற்று ஆறுதலாய் இருந்தாலும் அவளால் அழுகையை நிறுத்த முடியவில்லை. அங்கு படுத்திருப்பது அவளுடைய இரண்டாவது குழந்தை. நேற்று வரை சிரித்து, அழகாய், சின்னதாய் கொட்டாவி விட்டு உறங்கிய குழந்தை.. இன்று இப்படி, இந்த இருப்பை அவளால் ஜீரணம் செய்யவே முடியவில்லை.
திடீரென வாந்தியும் பேதியுமாய் போகவும், அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. மாலை வரை பார்த்துவிட்டு, இங்கு கொண்டு வந்தாள்.
"அட்மிட் பண்ணிதாம்மா பார்க்கணும்.. இப்போதைக்கு ஒன்னும் சொல்ல முடியாது."
அவளால் விலை மதிக்க முடியாத ஒன்று, சிறு கருணை கூட அற்று மிக சாதாரணமாக அலட்சியப் படுத்தப்படவும் அவளுக்கு உள்ளே என்னவோ செய்தது. புரியாமல் ஏதேதோ உளறினாள்.
"நேத்து வரைக்கும் நல்லாத்தான் இருந்துச்சு டாக்டர், இப்போ திடீர்னு என்னவோ ஆய்டுச்சு.. கொஞ்சம் என்னன்னு பாருங்க.." அவள் கையெடுத்து கும்பிடவும்,
"மொதல்ல பதட்டப்படாதீங்க. நான் என்னன்னு பார்க்கிறேன்.."
அவள் கூப்பிய கையை கீழே இறக்காமல் இருந்தாள். தடுப்பாரற்று கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. டாக்டர் மெல்ல ஸ்டெதஸ்கோப்பை குழந்தையின் மார்பு, வயிறு, முதுகில் வைத்துப் பார்த்துக்கொண்டே,
"குழந்தைக்கு இது எத்தனாவது மாசம்..? தாய்ப்பால்தானே குடுக்கறீங்க..?"
"பத்தாவது மாசம் டாக்டர்.. தூங்கும் போது மட்டும் புட்டி பால் குடுக்குறோம்.."
"ஓ, ஏதாவது மண்ல படுக்க வெச்சிருந்தீங்களா..?"
"இல்ல, எப்பவுமே என் கையிலதான் இருக்கும், அல்லாஹ் தந்த பரிசு..!" அவள் சொல்லும் போது வற்றி இருந்த அவள் கன்னம் மீண்டும் வெள்ளமானது..
"ம்ம், பாட்டில் நிப்பிள் அடிக்கடி மாத்திடறீங்களா..?" டாக்டர் கேள்வி புரியாமல் அவரைப் பார்க்கவும்.. அவர் மீண்டும் கேட்டார். அவளுக்கு சுளீரென்று அடித்தது,
"அல்லாஹ் என்னால, என் கவனக்குறைவாலதானே இந்த குழந்தைக்கு இவ்வளவும் நடந்தது..??"
"என்னம்மா உங்களத்தான்.. அடிக்கடி மாத்தறீங்களா என்ன..?.."அவள் தயங்கி, மெல்லிய விசும்பலுடன், "இல்ல, அது மாத்த மறந்திட்டேன்.." சொல்லிவிட்டு சேலைத் தலைப்பில் முகம் பொத்தி அழ ஆரம்பித்தாள்.
"ஒன்னும் பிரச்சினை இல்ல, அழாதீங்க.. உடனே குழந்தைய அட்மிட் பண்ணிருங்க.."அவர் சொல்லிவிட்டு வேகமாய் குழந்தைக்குத் தர வேண்டிய மருந்துகளை எழுதவும், அவள் குழந்தையை நெஞ்சில் புதைத்து, அதன் தலை மேல் தன் தலையை வைத்து அழுதாள்.
"அந்த டெஃப்லான கொஞ்சம் எடுத்துட்டு வாங்க.." அந்த நர்ஸ் யாரிடமோ கூறிவிட்டு, தன் கையில் வைத்திருந்த காட்டன் துணியை ஒன்றின் மேல் ஒன்று சுற்றி, பிளாஸ்த்திரியால் ஒரு பேஃட் போல் செய்து குழந்தையின் கையில் கட்டினாள். கிட்டத்தட்ட கை உடைந்து கட்டு போட்டாற்போல் ஆயிற்று. குழந்தையின் கையில் ஒரு நரம்பை தேர்வு செய்தாள்.
நர்ஸ் குளுக்கோஸ் ஏற்ற மிக நீண்ட ஊசியை எடுத்து குழந்தையின் கைகளை அழுத்தும் போது, தலை கவிழ்ந்து கொண்டாள்.
"அல்லாஹ் என் குழந்தைய காப்பாத்து.."
அவள் இடைவிடாமல் பிரார்த்திக்கவும், குழந்தை வீறிட்டு அழுதது.
"இது கடைசிக்கு வந்ததும் என்னைக் கூப்பிடுங்க" அந்த பாட்டிலின் அளவைக் காட்டி விட்டு அவள் நகரவும்..
"அத கரெக்ட்டா பார்த்துகுங்க, தீந்து போச்சுன்னா கையில இருக்கிற ரத்தமெல்லாம் அதுல போய்டும்".. கேட்காமலே புது பயத்தை தந்தாள் அருகில் இருந்த ஒருத்தி. பயத்தைப் பரிமாறிக் கொள்வதும் மனித இயல்புதான் போலும்!
அவளுடைய குழந்தையும் கிட்டதட்ட அதே போல் படுத்திருந்தது. என்னவென்று விசாரித்தாள். ஏனோ சற்று ஆறுதலாய் இருந்தது. வருத்தத்தை இன்னோர் வருத்தம் சமப்படுத்துவது எப்படி என்றே புரியவில்லை. ஒரு வேளை தனக்கு மட்டும்தான் பிரச்சினை என்று ஒரு பிரமை தோன்றி, அருகில் இருப்போர்க்கும் பார்த்து, பொது என்று உணரும்போது அமைதி கொள்ளுதோ..?..இல்லை பிறர் வருத்தம் அடைகையில் தேற்ற வேண்டிய பொறுப்பை மனம் உணர்வதால், சுய வருத்தம் மறைந்து கொள்கிறதோ..??
சலீமைப் பார்த்த உடனே அவள் அழுதாள். இரவு முழுக்க அவள் உறங்க வில்லை.நிமிடத்திற்கு ஒரு முறை அது தீர்ந்து விட்டதா என பார்த்தாள். அறிவு அது தீர வாய்ப்பில்லை என்று சொன்னாலும் மனம் அதைக் கேட்க மறுத்தது. ஏற்கெனவே தன் பிள்ளைக்குத் தன்னால்தான் இப்படி ஆனது என்ற குற்ற உணர்வு அவளை பாடாய் படுத்தியது.
"வாப்பா எனக்கு பசிக்குது", அதிகாலை தொழுகை முடித்து விரைவாக உனவருந்த பழக்கப்படுத்தி இருந்ததாலும், இன்னும் உள்ளிருந்து தோன்றும் உணர்வுகளை மறைத்து இடத்திற்கு தகுந்தாற்போல் பேசும் வயது வராததாலும், அவன் மறைக்காமல் கேட்டான். சலீம் தலையசைத்து இருவருக்கும் உணவு வாங்கி வரச் சென்றான்.
அவன் நடந்தானே தவிர, சிந்தை எல்லாம் வேறு எங்கோ இருந்தது.
"நேத்து அவசரப்பட்டு கையில் இருந்த எல்லா காசுக்கும் சரக்கு வாங்கிட்டமோ..?..இப்படி ஆகும்னு யாருக்குத் தெரியும்.. இப்போ கையில இருக்கிற காசு நிச்சயம் பத்தாது.. சரக்க திருப்பிக் குடுத்திட்டு காச குடுன்னா குடுப்பானா..? கேட்டுப் பார்க்கணும்.."
சலீம் இருக்கும் தெரு வண்ணத்துப் பூச்சியின் உடலைப் போன்றது. அதன் இரு பக்க இறக்கைகள் போல் சுற்றிலும் வீடுகள் அமைந்து இருக்கும். அதன் இரு முனைகளிலும் இரு கடைகள் அமைந்திருக்கும். நடுவில் இருப்பது அவனுடையது. பெரும்பாலும் இரு முனைகளிலும் உள்ள கடைகளில்தான் கூட்டம் ஆக்கிரமிக்கும். இடைபட்ட மக்கள்தான் இவன் கடையை நாடுவர்... "இந்த லட்சணத்துல இருந்த காசுக்கெல்லாம் சரக்கு வாங்கிப் போட்டாச்சு.." சலீம் நொந்து கொண்டே இருவருக்கும் சாப்பிட வாங்கி வந்தான்.
"சரி.. நான் கடை வரைக்கும் போய்ட்டு வரேன்.." சலீம் சொல்லவும், இப்போது அவனைத் தடுப்பது உசிதமற்றது என்பதை உணர்ந்ததால் அமைதியாக இருந்தாள். அவன் குழந்தையை ஒரு முறை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
கிட்டதட்ட அந்த ஊரே நிரம்பி வழிந்தது, அவன் தெருவிற்கு அருகில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா.
"நிச்சயம் பஸ்ல கூட்டம் நிரம்பி வழியும், பேசாம நடந்தே போயிடலாம்.." அவனுக்குக் கொஞ்சம் நடக்க வேண்டும் போல் இருந்தது.
"சரக்க வாங்கிட்டு காசு தரமாட்டேன்னா, யார் கிட்டயாவது கேட்டு பார்க்கனும், யார்கிட்ட..? அல்லாஹ் நீதான் ஒரு வழியக் காட்டனும்.."அவன் யோசித்துக்கொண்டே நடக்க..
அவன் கடை எதிரே யாருக்கோ காத்திருந்தது போல் ஒரு கூட்டம் நின்றது..
"என்ன பாய்,, எவ்ளவு நேரமா உங்களுக்காகக் காத்திருக்கிறது, இன்னிக்கு அம்மன் விஷேசம், உங்க கடையத் தவிர மத்ததெல்லாம் மூடிடுவாங்கன்னு தெரியாதா..? சீக்கிரம் கடையத் தொறங்க. அம்மனுக்கு பொங்க சாமான் வாங்கணும்.." வாடிக்கையாய் கடைக்கு வருபவன் சொல்லவும்தான் சென்ற முறையும் இப்படி ஆனது நினைவுக்கு வந்தது.
அவசர அவசரமாக கடையைத் திறந்தான். "பாய் எனக்கு மொதல்ல சாமானெல்லாம் கட்டுங்க.." வாடிக்கையாய் வருபவன் மற்றவர்கள் முன்னிலையில் தனக்கும் அந்த கடைக்கும் உள்ள உறவை பறைசாற்றவும்.. சலீம் தலை அசைத்தான்.
ஒவ்வொரு முறை கையில் பணம் வரும்போதும் நெஞ்சு "அல்லாஹ்..அல்லாஹ்.." என்றது. "பாய் பிரசிடெண்ட் வாங்கியார சொன்னாரு.." ஒரு பெரிய தாளை நீட்டவும், தேவைக்கு சரியான நேரத்தில் பெறும் உதவி அனைத்தையும் கரைய வைத்துவிடும். நன்றிப் பெருக்கில் சலீமின் கண்களில் நீர் நிறைந்தது. பொருள் எடுப்பதாய்த் திரும்பி அதைத் துடைத்துக் கொண்டான்.
கிட்டதட்ட அரை மணி நேரத்திற்குள் தேவைக்கு அதிகமாகவே சலீமின் கையில் பணம் சேர்ந்தது. இனி போதும்.. என்றெண்ணி கடையை மூடிய போது மாரியம்மன் அந்த வழியே ஊர்வலமாய் வந்துகொண்டிருந்தாள்.
சலீம் வானத்தை ஒரு முறை பார்த்து.. "அல்லாஹ் இவர்கள் திருவிழா நன்றாக நடக்கட்டும்..!!" என்று பிரார்த்தித்துக் கொண்டான்.
அதைப் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தாள். என்ன செய்தும் அவளால் கட்டுப்படுத்த இயலவில்லை. அப்படியே சலீமின் தோளில் விழுந்து அழுதாள். "என்னாலதானே இதெல்லாம்..?"
கிட்டதட்ட அவனும் அழுது விடும் நிலையில்தான் இருந்தான்.இருந்தும் காட்டிக் கொள்ளாமல் அவளைத் தேற்றினான்.
"அதான் ஒன்னும் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டா§ர.. அப்புறமும் ஏன் அழற..?"
அவனுடைய பேச்சு சற்று ஆறுதலாய் இருந்தாலும் அவளால் அழுகையை நிறுத்த முடியவில்லை. அங்கு படுத்திருப்பது அவளுடைய இரண்டாவது குழந்தை. நேற்று வரை சிரித்து, அழகாய், சின்னதாய் கொட்டாவி விட்டு உறங்கிய குழந்தை.. இன்று இப்படி, இந்த இருப்பை அவளால் ஜீரணம் செய்யவே முடியவில்லை.
திடீரென வாந்தியும் பேதியுமாய் போகவும், அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. மாலை வரை பார்த்துவிட்டு, இங்கு கொண்டு வந்தாள்.
"அட்மிட் பண்ணிதாம்மா பார்க்கணும்.. இப்போதைக்கு ஒன்னும் சொல்ல முடியாது."
அவளால் விலை மதிக்க முடியாத ஒன்று, சிறு கருணை கூட அற்று மிக சாதாரணமாக அலட்சியப் படுத்தப்படவும் அவளுக்கு உள்ளே என்னவோ செய்தது. புரியாமல் ஏதேதோ உளறினாள்.
"நேத்து வரைக்கும் நல்லாத்தான் இருந்துச்சு டாக்டர், இப்போ திடீர்னு என்னவோ ஆய்டுச்சு.. கொஞ்சம் என்னன்னு பாருங்க.." அவள் கையெடுத்து கும்பிடவும்,
"மொதல்ல பதட்டப்படாதீங்க. நான் என்னன்னு பார்க்கிறேன்.."
அவள் கூப்பிய கையை கீழே இறக்காமல் இருந்தாள். தடுப்பாரற்று கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. டாக்டர் மெல்ல ஸ்டெதஸ்கோப்பை குழந்தையின் மார்பு, வயிறு, முதுகில் வைத்துப் பார்த்துக்கொண்டே,
"குழந்தைக்கு இது எத்தனாவது மாசம்..? தாய்ப்பால்தானே குடுக்கறீங்க..?"
"பத்தாவது மாசம் டாக்டர்.. தூங்கும் போது மட்டும் புட்டி பால் குடுக்குறோம்.."
"ஓ, ஏதாவது மண்ல படுக்க வெச்சிருந்தீங்களா..?"
"இல்ல, எப்பவுமே என் கையிலதான் இருக்கும், அல்லாஹ் தந்த பரிசு..!" அவள் சொல்லும் போது வற்றி இருந்த அவள் கன்னம் மீண்டும் வெள்ளமானது..
"ம்ம், பாட்டில் நிப்பிள் அடிக்கடி மாத்திடறீங்களா..?" டாக்டர் கேள்வி புரியாமல் அவரைப் பார்க்கவும்.. அவர் மீண்டும் கேட்டார். அவளுக்கு சுளீரென்று அடித்தது,
"அல்லாஹ் என்னால, என் கவனக்குறைவாலதானே இந்த குழந்தைக்கு இவ்வளவும் நடந்தது..??"
"என்னம்மா உங்களத்தான்.. அடிக்கடி மாத்தறீங்களா என்ன..?.."அவள் தயங்கி, மெல்லிய விசும்பலுடன், "இல்ல, அது மாத்த மறந்திட்டேன்.." சொல்லிவிட்டு சேலைத் தலைப்பில் முகம் பொத்தி அழ ஆரம்பித்தாள்.
"ஒன்னும் பிரச்சினை இல்ல, அழாதீங்க.. உடனே குழந்தைய அட்மிட் பண்ணிருங்க.."அவர் சொல்லிவிட்டு வேகமாய் குழந்தைக்குத் தர வேண்டிய மருந்துகளை எழுதவும், அவள் குழந்தையை நெஞ்சில் புதைத்து, அதன் தலை மேல் தன் தலையை வைத்து அழுதாள்.
"அந்த டெஃப்லான கொஞ்சம் எடுத்துட்டு வாங்க.." அந்த நர்ஸ் யாரிடமோ கூறிவிட்டு, தன் கையில் வைத்திருந்த காட்டன் துணியை ஒன்றின் மேல் ஒன்று சுற்றி, பிளாஸ்த்திரியால் ஒரு பேஃட் போல் செய்து குழந்தையின் கையில் கட்டினாள். கிட்டத்தட்ட கை உடைந்து கட்டு போட்டாற்போல் ஆயிற்று. குழந்தையின் கையில் ஒரு நரம்பை தேர்வு செய்தாள்.
நர்ஸ் குளுக்கோஸ் ஏற்ற மிக நீண்ட ஊசியை எடுத்து குழந்தையின் கைகளை அழுத்தும் போது, தலை கவிழ்ந்து கொண்டாள்.
"அல்லாஹ் என் குழந்தைய காப்பாத்து.."
அவள் இடைவிடாமல் பிரார்த்திக்கவும், குழந்தை வீறிட்டு அழுதது.
"இது கடைசிக்கு வந்ததும் என்னைக் கூப்பிடுங்க" அந்த பாட்டிலின் அளவைக் காட்டி விட்டு அவள் நகரவும்..
"அத கரெக்ட்டா பார்த்துகுங்க, தீந்து போச்சுன்னா கையில இருக்கிற ரத்தமெல்லாம் அதுல போய்டும்".. கேட்காமலே புது பயத்தை தந்தாள் அருகில் இருந்த ஒருத்தி. பயத்தைப் பரிமாறிக் கொள்வதும் மனித இயல்புதான் போலும்!
அவளுடைய குழந்தையும் கிட்டதட்ட அதே போல் படுத்திருந்தது. என்னவென்று விசாரித்தாள். ஏனோ சற்று ஆறுதலாய் இருந்தது. வருத்தத்தை இன்னோர் வருத்தம் சமப்படுத்துவது எப்படி என்றே புரியவில்லை. ஒரு வேளை தனக்கு மட்டும்தான் பிரச்சினை என்று ஒரு பிரமை தோன்றி, அருகில் இருப்போர்க்கும் பார்த்து, பொது என்று உணரும்போது அமைதி கொள்ளுதோ..?..இல்லை பிறர் வருத்தம் அடைகையில் தேற்ற வேண்டிய பொறுப்பை மனம் உணர்வதால், சுய வருத்தம் மறைந்து கொள்கிறதோ..??
சலீமைப் பார்த்த உடனே அவள் அழுதாள். இரவு முழுக்க அவள் உறங்க வில்லை.நிமிடத்திற்கு ஒரு முறை அது தீர்ந்து விட்டதா என பார்த்தாள். அறிவு அது தீர வாய்ப்பில்லை என்று சொன்னாலும் மனம் அதைக் கேட்க மறுத்தது. ஏற்கெனவே தன் பிள்ளைக்குத் தன்னால்தான் இப்படி ஆனது என்ற குற்ற உணர்வு அவளை பாடாய் படுத்தியது.
"வாப்பா எனக்கு பசிக்குது", அதிகாலை தொழுகை முடித்து விரைவாக உனவருந்த பழக்கப்படுத்தி இருந்ததாலும், இன்னும் உள்ளிருந்து தோன்றும் உணர்வுகளை மறைத்து இடத்திற்கு தகுந்தாற்போல் பேசும் வயது வராததாலும், அவன் மறைக்காமல் கேட்டான். சலீம் தலையசைத்து இருவருக்கும் உணவு வாங்கி வரச் சென்றான்.
அவன் நடந்தானே தவிர, சிந்தை எல்லாம் வேறு எங்கோ இருந்தது.
"நேத்து அவசரப்பட்டு கையில் இருந்த எல்லா காசுக்கும் சரக்கு வாங்கிட்டமோ..?..இப்படி ஆகும்னு யாருக்குத் தெரியும்.. இப்போ கையில இருக்கிற காசு நிச்சயம் பத்தாது.. சரக்க திருப்பிக் குடுத்திட்டு காச குடுன்னா குடுப்பானா..? கேட்டுப் பார்க்கணும்.."
சலீம் இருக்கும் தெரு வண்ணத்துப் பூச்சியின் உடலைப் போன்றது. அதன் இரு பக்க இறக்கைகள் போல் சுற்றிலும் வீடுகள் அமைந்து இருக்கும். அதன் இரு முனைகளிலும் இரு கடைகள் அமைந்திருக்கும். நடுவில் இருப்பது அவனுடையது. பெரும்பாலும் இரு முனைகளிலும் உள்ள கடைகளில்தான் கூட்டம் ஆக்கிரமிக்கும். இடைபட்ட மக்கள்தான் இவன் கடையை நாடுவர்... "இந்த லட்சணத்துல இருந்த காசுக்கெல்லாம் சரக்கு வாங்கிப் போட்டாச்சு.." சலீம் நொந்து கொண்டே இருவருக்கும் சாப்பிட வாங்கி வந்தான்.
"சரி.. நான் கடை வரைக்கும் போய்ட்டு வரேன்.." சலீம் சொல்லவும், இப்போது அவனைத் தடுப்பது உசிதமற்றது என்பதை உணர்ந்ததால் அமைதியாக இருந்தாள். அவன் குழந்தையை ஒரு முறை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
கிட்டதட்ட அந்த ஊரே நிரம்பி வழிந்தது, அவன் தெருவிற்கு அருகில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா.
"நிச்சயம் பஸ்ல கூட்டம் நிரம்பி வழியும், பேசாம நடந்தே போயிடலாம்.." அவனுக்குக் கொஞ்சம் நடக்க வேண்டும் போல் இருந்தது.
"சரக்க வாங்கிட்டு காசு தரமாட்டேன்னா, யார் கிட்டயாவது கேட்டு பார்க்கனும், யார்கிட்ட..? அல்லாஹ் நீதான் ஒரு வழியக் காட்டனும்.."அவன் யோசித்துக்கொண்டே நடக்க..
அவன் கடை எதிரே யாருக்கோ காத்திருந்தது போல் ஒரு கூட்டம் நின்றது..
"என்ன பாய்,, எவ்ளவு நேரமா உங்களுக்காகக் காத்திருக்கிறது, இன்னிக்கு அம்மன் விஷேசம், உங்க கடையத் தவிர மத்ததெல்லாம் மூடிடுவாங்கன்னு தெரியாதா..? சீக்கிரம் கடையத் தொறங்க. அம்மனுக்கு பொங்க சாமான் வாங்கணும்.." வாடிக்கையாய் கடைக்கு வருபவன் சொல்லவும்தான் சென்ற முறையும் இப்படி ஆனது நினைவுக்கு வந்தது.
அவசர அவசரமாக கடையைத் திறந்தான். "பாய் எனக்கு மொதல்ல சாமானெல்லாம் கட்டுங்க.." வாடிக்கையாய் வருபவன் மற்றவர்கள் முன்னிலையில் தனக்கும் அந்த கடைக்கும் உள்ள உறவை பறைசாற்றவும்.. சலீம் தலை அசைத்தான்.
ஒவ்வொரு முறை கையில் பணம் வரும்போதும் நெஞ்சு "அல்லாஹ்..அல்லாஹ்.." என்றது. "பாய் பிரசிடெண்ட் வாங்கியார சொன்னாரு.." ஒரு பெரிய தாளை நீட்டவும், தேவைக்கு சரியான நேரத்தில் பெறும் உதவி அனைத்தையும் கரைய வைத்துவிடும். நன்றிப் பெருக்கில் சலீமின் கண்களில் நீர் நிறைந்தது. பொருள் எடுப்பதாய்த் திரும்பி அதைத் துடைத்துக் கொண்டான்.
கிட்டதட்ட அரை மணி நேரத்திற்குள் தேவைக்கு அதிகமாகவே சலீமின் கையில் பணம் சேர்ந்தது. இனி போதும்.. என்றெண்ணி கடையை மூடிய போது மாரியம்மன் அந்த வழியே ஊர்வலமாய் வந்துகொண்டிருந்தாள்.
சலீம் வானத்தை ஒரு முறை பார்த்து.. "அல்லாஹ் இவர்கள் திருவிழா நன்றாக நடக்கட்டும்..!!" என்று பிரார்த்தித்துக் கொண்டான்.
Wednesday, July 8, 2009
கதை (சத்தியமாக எந்த போட்டிக்கும் அல்ல!!)
மிகச் சரியாக துவாரத்தில் சாவியைப் பொருத்தி, மணிக்கட்டை வலதுபுறமாகத் திருப்பினான் மோகன். கண்கள் வாசலை நோக்க, கதவு திறந்திருந்தது. விரல்களால் கார்க்கதவு பூட்டப்பட்டுள்ளதா என்று பார்த்துக்கொண்டே அதை ஒட்டி இருந்த கெஸ்ட் ஹௌஸைப் பார்க்க, வேலு பேப்பர் படித்துக் கொண்டிருந்தான்.
வேலு, கண்ணனின் கண்டுபிடிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். கண்ணன் ஒரு எழுத்தாளன்; விதம் விதமாக எழுதுவான்; இருந்தும் ஏதோ ஒன்று குறைவதாய்த் தேடுவான். ஒத்ததிர்வுகளால் வார்த்தைகளை ஒன்று சேர்த்து மூளையின் செல்களைத் தூண்டும் விதமாய் ஒரு கதை எழுத வேண்டும் என்பது அவனது நீண்ட நாளைய லட்சியம்.
அப்படிப்பட்ட சிந்தனையில், வார்த்தைகளை மாற்றி மாற்றி அடுக்கி அதன் அதிர்வுகளை கவனித்துக்கொண்டே தெருவில் நடக்கையில், தெருவோரம் கந்தலான நிலையில் வேலு கிடந்தான். பசியால் உடலைக் கூட அசைக்க முடியாமல், கண்கள் மட்டும் போவோர் வருவோரை நோக்கி அங்கும் இங்குமாய்த் திரும்பின. அனைத்துக் கண்களுக்கும் இவன் ஒரு காட்சிப் பொருளாய்த் தெரிய, இவன் மட்டும் அருகில் சென்று உதவி செய்து, தன்னுடன் அழைத்து வந்தான்.
வேலு வந்த சிறு தினங்களிலேயே கண்ணனை முழுதும் புரிந்து கொண்டான். காஃபி போட்டுத் தருவதும், புத்தகம், பேப்பர் இவற்றை சேகரிப்பதும் விருப்பப்பட்டால் தோட்ட வேலை செய்வதும் தன்னுடைய வேலை என சொல்லாமலேயே புரிந்து கொண்டான்.
ஒரு தாளில் தான் சேகரிக்கும் விபரங்களை எழுதி வேலுவிடம் படிக்கச் சொல்வான் கண்ணன். ஒன்றையே திரும்பத் திரும்ப, ஒவ்வொரு முறை தனக்கு காஃபி தரும் போதும் படித்து காட்டச் சொல்வான். நாள் கணக்காய், வாரக் கணக்காய், சில சமயம் மாதம் கூட, படிக்கச் சொல்வான்.
வேலுவின் ஒவ்வொரு மாற்றத்தையும் குறித்துக் கொள்வான். அவன் உறக்கத்தின் தன்மை கேட்டு அறிந்து கொள்வான், கனவுகள் ஏதேனும் இருந்தால் அதைப் பற்றியும் குறித்துக் கொள்வான். வேலு ஒரு முறை கூட எதற்கு என்று கேட்டதில்லை. திரும்பத் திரும்பப் படிக்க அவன் சலித்துக் கொண்டதும் இல்லை.
கிட்டத்தட்ட வேலு கண்ணனின் நடமாடும் ஆய்வுக் கூடம் போல் ஆகியிருந்தான். கண்ணன் பல கருத்துக்களை அவனுடன் பகிர்ந்து கொள்வான். கண்ணணாய்க் கேட்காமல் வேலு கருத்துரைக்க மாட்டான். வேலுவின் கருத்துக்களைக் கண்ணன் உன்னிப்பாய் கவனிப்பான். ஒரு நல்ல கலைஞனுக்கு, தன் கருத்தை மதிப்பவனை விட மறுக்காதவர் துணையே வேண்டும். அந்த வகையில் வேலு, கண்ணனின் கலைத் துணை போல் ஆகி இருந்தான்.
சிந்தனைகளைக் கலைத்தவனாய் மோகன் கண்ணனின் வீட்டிற்குள் பிரவேசித்தான். அந்த நகரத்தின் தலைசிறந்த மன நல மருத்துவர்களில் ஒருவன் மோகன். கண்ணனின் நெடுங்கால நண்பன். அதிகாலை நடை முடித்து, கண்ணனுடன் காஃபி அருந்துவது அவனது நீண்ட கால வழக்கம். மாடியின் இடது மூலையில் கண்ணனின் எழுதும் அறை. இன்று சற்றுத் தாமதமாய் வந்ததால் அவன் அங்குதான் இருப்பான்.
கண்ணன் தலை கவிழ்ந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தான். அவனைப் பற்றி அறிந்ததால் யோசிக்காமல் கதவை தட்டினான்.
அவன் தலை திருப்பி, தலை அசைத்தான்.
"ஒரு சின்ன ஹெல்ப், நேத்து வேலு பார்க் போகும்போது சின்ன ஆக்ஸிடெண்ட், கால்ல அடி பட்டிடுச்சு, கீழ கிட்சன்ல நீயே காஃபி போட்டு வெய்யேன்.. நான் இப்போ வந்திடறேன்."
மோகன் சரி என்பதாய்த் தலை அசைத்து வெளியேற, மீண்டும் தலை கவிழ்ந்து எழுத ஆரம்பித்தான்.
ஒரு புன்னகையுடன் கண்ணன், தன் கோப்பையை வாயில் பொருத்தினான்.
"இன்னிக்கு, எனக்கு ஒரு சில டவுட்ஸ் உன்கிட்ட கிளியர் பண்ணிக்க வேண்டி இருக்கு!",
"தாராளமா, அது என்ன என்கிட்ட?!" என்றான் கண்ணன்.
"காரணம் இருக்கு, இப்போ என்கிட்ட வந்திருக்கிற கேஸ் ஒரு எழுத்தாளர். ஏதோ ஒரு சில கதைகள் எழுதி இருக்கார், அவ்வளவுதான். பெருசா யாருக்கும் தெரியாது. அவருக்கு ஒரு பிரச்சினை; அதுவும் அவர் எழுத்தாலே."
"புரியல, எழுத்தால என்ன பிரச்சினை?"
"அவர் கதையைக் கற்பனை பண்ணும்போது, அது ஒரு சிந்தனை அப்படிங்றத மறந்திடறாரு, அந்தக் கற்பனையை நிஜம்னு நம்பறார்.." மோகன் கண்களை மேல் நோக்கித் திருப்பி, இதற்கு மேல் எப்படிச் சொல்வது என சிந்தித்தான்.
"இப்போ, நீ முக்கியமா யாரையாவது சந்திக்கப் போற, நீ என்ன செய்வ? அவர் கிட்ட என்ன பேசணும்னு, முன்னாடியே கொஞ்சம் சிந்தனை பண்ணி வெச்சுக்குவே, அவருடைய பதில்கள் எப்படி இருக்கும்னு கொஞ்சம் நீயே சிந்திச்சும் வெச்சுக்குவே.. உன்னுடைய சிந்தனைக்கு மாறா இருந்தா எந்த மாதிரி பதில் சொல்லலாம்னும் யோசிப்ப. அதுல நீயே ரெண்டு பேராவும் இருப்ப, அதனால இத உன்னோட புத்தி பொய்னு கலைச்சிட்டு வெளியே வந்திரும். இங்க உன்னோட சிந்தனை கற்பனை மேல ஆதிக்கம் செய்யும். ஆனா அவருக்கு அப்படி இல்ல. அவர் பேசப் போற ஒருத்தர் கூட கற்பனைல தன்னுடைய கேள்விகளைக் கேட்டு, அதுக்குத் தகுந்த மாதிரி பதில்களையும், அவர் மறுத்தா என்ன செய்யணும்கிறதையும் கற்பனை மூலமாவே யோசிப்பார். அவரோட சிந்தனை எல்லாமே கற்பனை வாயிலாவே நடக்கும். அதாவது கற்பனை இல்ல, மனம்னு சொல்லலாம், சிந்தனை மேல ஆதிக்கம் செலுத்தும்."
நீண்ட பெருமூச்சொன்றை விட்ட கண்ணன், "ஸோ, இப்போ நாம அவரோட கற்பனையாகிய சிந்தனையை நிறுத்தணும்னு சொல்ற?",
"இல்லை.. பிரச்சினை இதோட முடியல. இப்படி அவர் கற்பனை பண்ணி, கற்பனை பண்ணி, தான் சந்திக்கிற ஒவ்வொருத்தருடைய பேசும் விதத்தையும் பழகும் விதத்தையும் வெச்சு, அவங்கள அதி தீவிரமா உணர்ந்து அவங்களோட தன்மை மறு நாள் எப்படி இருக்கும்னு முந்தைய நாளே உணர்ந்து இருக்கார்!"
மோகன் சொல்வதையே உற்றுக் கவனித்து சிறிது நேர மவுனத்திற்குப்பின்..
"அதாவது ஒரு நாள் எல்லாரை விடவும் முன்னால இருக்கார்னு சொல்ற? சரி, இது அவருக்குத் தெரியுமா?"
"இல்லை, அவருக்குத் தெரியாது, அவருக்கு என்ன பிரச்சினைன்னு நாங்க கண்டுபிடிக்கவே ரொம்ப நாள் ஆயிடுச்சு. அவருக்குத் தெரியாமத்தான் ட்ரீட்மெண்ட் கொடுத்திட்டு இருக்கோம். சரி, சொல்லு ஒரு எழுத்தாளனா இவரோட பிரச்சினை உனக்கு எப்படிப் படுது? உனக்கு ஏதாவது தோணுதா?"
"ஒரு நாள் முழுக்கத் தூங்க வெச்சுப் பார்க்கலாமே? சரி, இதால என்ன பிரச்சினை அவர்க்கு?"
"ம்ம், அதுவும் பண்ணிப் பார்த்தோம், ஆனா முழிப்பு வந்த கொஞ்ச நேரத்திலேயே மறுபடியும் அவரோட உணரும் தன்மை மாறிடறது. பிரச்சினைன்னு பார்க்கப்போனா, இப்போ அவரோட பார்வைக்கு தான் சந்திக்கிற எல்லாத்தையும் ஒரு நாள் கழிச்சு எப்படித் தெரியுமோ, அப்படியே இப்போ பார்க்கிறார். அதுவும் ஒருத்தர சந்திக்கும் போதுதான் இது நடக்குது. இதுக்கு வேற ஏதோ பண்ணனும். அதான் உன்கிட்ட கேட்டா ஏதாவது யோசனை சொல்வேன்னு?"
"ம்ம், கொஞ்சம் நிதானமா செயல்பட வேண்டிய ஒன்றுதான். மொதல்ல புதுசா யாரையும் அவர சந்திக்க விடாமப் பார்த்துக்கனும். கற்பனைக்கும் சிந்தனைக்கும் உள்ள வேறுபாட்டை அவராகவே உணரச் செய்யணும். அவர் ஒரு எழுத்தாளர்ங்கிறதால இதையே உனக்குத் தோணின ஒரு கதையா சொல்லி அவரையே எழுதச் சொல்லலாம். ஏன்னா, தன்னுடைய பிரச்சினைகளைப் பத்தி சிந்திக்கிறதவிட கைப்பட எழுதும்போது அதன் மேல கவனம் கொஞ்சம் அதிகமா இருக்கும். அப்பறம் இருக்கவே இருக்கு யோகா, மெடிட்டேஷன் ஏதாவது பண்ணச் சொல்லலாம்!"..சற்று நீளமாய்ப் பேசிவிட்டு இரண்டு முறை மேலும் கீழுமாய் தலை ஆட்டி மோகனைப் பார்க்க.
"ம்ம், கரெக்ட், இத அவரே உணர்ந்தாதான் சரிப்படும். எனக்கு நீ இன்னொரு சின்ன ஹெல்ப் பண்ணனும். அவரைக் கண்டிப்பா எழுதச் சொல்லணும். இருந்தாலும் இத ஒரு கதை வடிவில நீ எழுதிக் குடுத்தா இன்னும் கொஞ்சம் வசதியா இருக்கும். அவரால ஒரு வேளை எழுத முடியலைன்னா உன்னுடைய கதையக் காட்டிப் படிக்கச் சொல்லலாம் இல்ல.. இதக் குடுத்து நீங்களா இருந்தா எப்படி எழுதுவீங்கன்னு கேட்கலாம்"
கெஞ்சும் விதமாய்க் கேட்டுவிட்டு அவனையே பார்க்க,
"சரி, எழுதிட்டாப் போச்சு. ஆனாலும் உனக்கு உன் வேலை மேல இவ்வளவு அக்கறை இருக்க கூடாதுடா. நேத்து இந்த நேரம் யாருடைய ஃபோனையோ அட்டன்ட் பண்ணப் போய், வைஃப் பாத் ரூம்ல வழுக்கி விழுந்து சீரியஸ்ஸா இருக்கறதா சொன்ன, இப்போ வந்து பேஷண்ட்டப் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்க... .கொஞ்சம் குடும்பத்தையும் பார்த்துக்கோ!"
சிரிப்புடன் கண்ணன் சொல்ல, ஏதும் பேசாமல் மோகன், "நீ சொன்னதுக்கு அப்பறம்தான் ஞாபகமே வருது.. நான் ஹாஸ்பிடல் போகணும். சரி.. நாளைக்குப் பார்க்கலாம்.. கதைய மறந்திடாத"
அவன் எழுந்து கை குலுக்க, கண்டிப்பாய் என்பதாய் கண்ணன் தலை அசைத்தான்.
மோகன் கார்க் கதவை மூடி வெளியே செல்வதற்காக கதவு திறந்துள்ளதா எனப் பார்க்க.. வேலு அப்போதுதான் திறந்து வைத்துவிட்டு வெளியே சென்று கொண்டிருந்தான். அவசர அவசரமாக மொபைலில் ஹோம் என்பதைக் கண்டுபிடித்து அழைக்க, எதிர் முனை கிடைத்ததும் கத்தினான். "பாத்ரூம் பக்கம் மட்டும் போய்டாத..."..
பதிலுக்கு பதிலாக ஏதோ ஒரு அலறல் சப்தம் கேட்க அவன் செய்வதறியாது திகைத்தான்.
சிறிது நேரம் கழித்து நீர் விழும் சப்தம் மட்டும் கேட்க, அவன் காரை விரைந்து இயக்கினான். அவனுடய கார் இயங்கும் வேகத்தை விட அவன் இதயம் இயங்கும் வேகம் அதிகமாய் இருப்பது போல் தோன்றியது.
வீட்டிற்கு மிக அருகில் வந்தும் அவனால் சமாதானம் கொள்ள இயலவில்லை. தன்னுடைய தவற்றிற்கு வருந்தி விழி மூடி இங்கும் அங்குமாய் தலை அசைக்க திடீரென, வேலு வீட்டை விட்டுக் கிளம்பியது பிம்பம் போல் தோன்றியது
கவுண்டர் அட்டாக் : மக்களே.. இவன் இம்சை தாங்கல்.. யாராச்சுக்கு இந்த கதை புரியுதா? இதுக்கு பேர் கதையா?
வேலு, கண்ணனின் கண்டுபிடிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். கண்ணன் ஒரு எழுத்தாளன்; விதம் விதமாக எழுதுவான்; இருந்தும் ஏதோ ஒன்று குறைவதாய்த் தேடுவான். ஒத்ததிர்வுகளால் வார்த்தைகளை ஒன்று சேர்த்து மூளையின் செல்களைத் தூண்டும் விதமாய் ஒரு கதை எழுத வேண்டும் என்பது அவனது நீண்ட நாளைய லட்சியம்.
அப்படிப்பட்ட சிந்தனையில், வார்த்தைகளை மாற்றி மாற்றி அடுக்கி அதன் அதிர்வுகளை கவனித்துக்கொண்டே தெருவில் நடக்கையில், தெருவோரம் கந்தலான நிலையில் வேலு கிடந்தான். பசியால் உடலைக் கூட அசைக்க முடியாமல், கண்கள் மட்டும் போவோர் வருவோரை நோக்கி அங்கும் இங்குமாய்த் திரும்பின. அனைத்துக் கண்களுக்கும் இவன் ஒரு காட்சிப் பொருளாய்த் தெரிய, இவன் மட்டும் அருகில் சென்று உதவி செய்து, தன்னுடன் அழைத்து வந்தான்.
வேலு வந்த சிறு தினங்களிலேயே கண்ணனை முழுதும் புரிந்து கொண்டான். காஃபி போட்டுத் தருவதும், புத்தகம், பேப்பர் இவற்றை சேகரிப்பதும் விருப்பப்பட்டால் தோட்ட வேலை செய்வதும் தன்னுடைய வேலை என சொல்லாமலேயே புரிந்து கொண்டான்.
ஒரு தாளில் தான் சேகரிக்கும் விபரங்களை எழுதி வேலுவிடம் படிக்கச் சொல்வான் கண்ணன். ஒன்றையே திரும்பத் திரும்ப, ஒவ்வொரு முறை தனக்கு காஃபி தரும் போதும் படித்து காட்டச் சொல்வான். நாள் கணக்காய், வாரக் கணக்காய், சில சமயம் மாதம் கூட, படிக்கச் சொல்வான்.
வேலுவின் ஒவ்வொரு மாற்றத்தையும் குறித்துக் கொள்வான். அவன் உறக்கத்தின் தன்மை கேட்டு அறிந்து கொள்வான், கனவுகள் ஏதேனும் இருந்தால் அதைப் பற்றியும் குறித்துக் கொள்வான். வேலு ஒரு முறை கூட எதற்கு என்று கேட்டதில்லை. திரும்பத் திரும்பப் படிக்க அவன் சலித்துக் கொண்டதும் இல்லை.
கிட்டத்தட்ட வேலு கண்ணனின் நடமாடும் ஆய்வுக் கூடம் போல் ஆகியிருந்தான். கண்ணன் பல கருத்துக்களை அவனுடன் பகிர்ந்து கொள்வான். கண்ணணாய்க் கேட்காமல் வேலு கருத்துரைக்க மாட்டான். வேலுவின் கருத்துக்களைக் கண்ணன் உன்னிப்பாய் கவனிப்பான். ஒரு நல்ல கலைஞனுக்கு, தன் கருத்தை மதிப்பவனை விட மறுக்காதவர் துணையே வேண்டும். அந்த வகையில் வேலு, கண்ணனின் கலைத் துணை போல் ஆகி இருந்தான்.
சிந்தனைகளைக் கலைத்தவனாய் மோகன் கண்ணனின் வீட்டிற்குள் பிரவேசித்தான். அந்த நகரத்தின் தலைசிறந்த மன நல மருத்துவர்களில் ஒருவன் மோகன். கண்ணனின் நெடுங்கால நண்பன். அதிகாலை நடை முடித்து, கண்ணனுடன் காஃபி அருந்துவது அவனது நீண்ட கால வழக்கம். மாடியின் இடது மூலையில் கண்ணனின் எழுதும் அறை. இன்று சற்றுத் தாமதமாய் வந்ததால் அவன் அங்குதான் இருப்பான்.
கண்ணன் தலை கவிழ்ந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தான். அவனைப் பற்றி அறிந்ததால் யோசிக்காமல் கதவை தட்டினான்.
அவன் தலை திருப்பி, தலை அசைத்தான்.
"ஒரு சின்ன ஹெல்ப், நேத்து வேலு பார்க் போகும்போது சின்ன ஆக்ஸிடெண்ட், கால்ல அடி பட்டிடுச்சு, கீழ கிட்சன்ல நீயே காஃபி போட்டு வெய்யேன்.. நான் இப்போ வந்திடறேன்."
மோகன் சரி என்பதாய்த் தலை அசைத்து வெளியேற, மீண்டும் தலை கவிழ்ந்து எழுத ஆரம்பித்தான்.
ஒரு புன்னகையுடன் கண்ணன், தன் கோப்பையை வாயில் பொருத்தினான்.
"இன்னிக்கு, எனக்கு ஒரு சில டவுட்ஸ் உன்கிட்ட கிளியர் பண்ணிக்க வேண்டி இருக்கு!",
"தாராளமா, அது என்ன என்கிட்ட?!" என்றான் கண்ணன்.
"காரணம் இருக்கு, இப்போ என்கிட்ட வந்திருக்கிற கேஸ் ஒரு எழுத்தாளர். ஏதோ ஒரு சில கதைகள் எழுதி இருக்கார், அவ்வளவுதான். பெருசா யாருக்கும் தெரியாது. அவருக்கு ஒரு பிரச்சினை; அதுவும் அவர் எழுத்தாலே."
"புரியல, எழுத்தால என்ன பிரச்சினை?"
"அவர் கதையைக் கற்பனை பண்ணும்போது, அது ஒரு சிந்தனை அப்படிங்றத மறந்திடறாரு, அந்தக் கற்பனையை நிஜம்னு நம்பறார்.." மோகன் கண்களை மேல் நோக்கித் திருப்பி, இதற்கு மேல் எப்படிச் சொல்வது என சிந்தித்தான்.
"இப்போ, நீ முக்கியமா யாரையாவது சந்திக்கப் போற, நீ என்ன செய்வ? அவர் கிட்ட என்ன பேசணும்னு, முன்னாடியே கொஞ்சம் சிந்தனை பண்ணி வெச்சுக்குவே, அவருடைய பதில்கள் எப்படி இருக்கும்னு கொஞ்சம் நீயே சிந்திச்சும் வெச்சுக்குவே.. உன்னுடைய சிந்தனைக்கு மாறா இருந்தா எந்த மாதிரி பதில் சொல்லலாம்னும் யோசிப்ப. அதுல நீயே ரெண்டு பேராவும் இருப்ப, அதனால இத உன்னோட புத்தி பொய்னு கலைச்சிட்டு வெளியே வந்திரும். இங்க உன்னோட சிந்தனை கற்பனை மேல ஆதிக்கம் செய்யும். ஆனா அவருக்கு அப்படி இல்ல. அவர் பேசப் போற ஒருத்தர் கூட கற்பனைல தன்னுடைய கேள்விகளைக் கேட்டு, அதுக்குத் தகுந்த மாதிரி பதில்களையும், அவர் மறுத்தா என்ன செய்யணும்கிறதையும் கற்பனை மூலமாவே யோசிப்பார். அவரோட சிந்தனை எல்லாமே கற்பனை வாயிலாவே நடக்கும். அதாவது கற்பனை இல்ல, மனம்னு சொல்லலாம், சிந்தனை மேல ஆதிக்கம் செலுத்தும்."
நீண்ட பெருமூச்சொன்றை விட்ட கண்ணன், "ஸோ, இப்போ நாம அவரோட கற்பனையாகிய சிந்தனையை நிறுத்தணும்னு சொல்ற?",
"இல்லை.. பிரச்சினை இதோட முடியல. இப்படி அவர் கற்பனை பண்ணி, கற்பனை பண்ணி, தான் சந்திக்கிற ஒவ்வொருத்தருடைய பேசும் விதத்தையும் பழகும் விதத்தையும் வெச்சு, அவங்கள அதி தீவிரமா உணர்ந்து அவங்களோட தன்மை மறு நாள் எப்படி இருக்கும்னு முந்தைய நாளே உணர்ந்து இருக்கார்!"
மோகன் சொல்வதையே உற்றுக் கவனித்து சிறிது நேர மவுனத்திற்குப்பின்..
"அதாவது ஒரு நாள் எல்லாரை விடவும் முன்னால இருக்கார்னு சொல்ற? சரி, இது அவருக்குத் தெரியுமா?"
"இல்லை, அவருக்குத் தெரியாது, அவருக்கு என்ன பிரச்சினைன்னு நாங்க கண்டுபிடிக்கவே ரொம்ப நாள் ஆயிடுச்சு. அவருக்குத் தெரியாமத்தான் ட்ரீட்மெண்ட் கொடுத்திட்டு இருக்கோம். சரி, சொல்லு ஒரு எழுத்தாளனா இவரோட பிரச்சினை உனக்கு எப்படிப் படுது? உனக்கு ஏதாவது தோணுதா?"
"ஒரு நாள் முழுக்கத் தூங்க வெச்சுப் பார்க்கலாமே? சரி, இதால என்ன பிரச்சினை அவர்க்கு?"
"ம்ம், அதுவும் பண்ணிப் பார்த்தோம், ஆனா முழிப்பு வந்த கொஞ்ச நேரத்திலேயே மறுபடியும் அவரோட உணரும் தன்மை மாறிடறது. பிரச்சினைன்னு பார்க்கப்போனா, இப்போ அவரோட பார்வைக்கு தான் சந்திக்கிற எல்லாத்தையும் ஒரு நாள் கழிச்சு எப்படித் தெரியுமோ, அப்படியே இப்போ பார்க்கிறார். அதுவும் ஒருத்தர சந்திக்கும் போதுதான் இது நடக்குது. இதுக்கு வேற ஏதோ பண்ணனும். அதான் உன்கிட்ட கேட்டா ஏதாவது யோசனை சொல்வேன்னு?"
"ம்ம், கொஞ்சம் நிதானமா செயல்பட வேண்டிய ஒன்றுதான். மொதல்ல புதுசா யாரையும் அவர சந்திக்க விடாமப் பார்த்துக்கனும். கற்பனைக்கும் சிந்தனைக்கும் உள்ள வேறுபாட்டை அவராகவே உணரச் செய்யணும். அவர் ஒரு எழுத்தாளர்ங்கிறதால இதையே உனக்குத் தோணின ஒரு கதையா சொல்லி அவரையே எழுதச் சொல்லலாம். ஏன்னா, தன்னுடைய பிரச்சினைகளைப் பத்தி சிந்திக்கிறதவிட கைப்பட எழுதும்போது அதன் மேல கவனம் கொஞ்சம் அதிகமா இருக்கும். அப்பறம் இருக்கவே இருக்கு யோகா, மெடிட்டேஷன் ஏதாவது பண்ணச் சொல்லலாம்!"..சற்று நீளமாய்ப் பேசிவிட்டு இரண்டு முறை மேலும் கீழுமாய் தலை ஆட்டி மோகனைப் பார்க்க.
"ம்ம், கரெக்ட், இத அவரே உணர்ந்தாதான் சரிப்படும். எனக்கு நீ இன்னொரு சின்ன ஹெல்ப் பண்ணனும். அவரைக் கண்டிப்பா எழுதச் சொல்லணும். இருந்தாலும் இத ஒரு கதை வடிவில நீ எழுதிக் குடுத்தா இன்னும் கொஞ்சம் வசதியா இருக்கும். அவரால ஒரு வேளை எழுத முடியலைன்னா உன்னுடைய கதையக் காட்டிப் படிக்கச் சொல்லலாம் இல்ல.. இதக் குடுத்து நீங்களா இருந்தா எப்படி எழுதுவீங்கன்னு கேட்கலாம்"
கெஞ்சும் விதமாய்க் கேட்டுவிட்டு அவனையே பார்க்க,
"சரி, எழுதிட்டாப் போச்சு. ஆனாலும் உனக்கு உன் வேலை மேல இவ்வளவு அக்கறை இருக்க கூடாதுடா. நேத்து இந்த நேரம் யாருடைய ஃபோனையோ அட்டன்ட் பண்ணப் போய், வைஃப் பாத் ரூம்ல வழுக்கி விழுந்து சீரியஸ்ஸா இருக்கறதா சொன்ன, இப்போ வந்து பேஷண்ட்டப் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்க... .கொஞ்சம் குடும்பத்தையும் பார்த்துக்கோ!"
சிரிப்புடன் கண்ணன் சொல்ல, ஏதும் பேசாமல் மோகன், "நீ சொன்னதுக்கு அப்பறம்தான் ஞாபகமே வருது.. நான் ஹாஸ்பிடல் போகணும். சரி.. நாளைக்குப் பார்க்கலாம்.. கதைய மறந்திடாத"
அவன் எழுந்து கை குலுக்க, கண்டிப்பாய் என்பதாய் கண்ணன் தலை அசைத்தான்.
மோகன் கார்க் கதவை மூடி வெளியே செல்வதற்காக கதவு திறந்துள்ளதா எனப் பார்க்க.. வேலு அப்போதுதான் திறந்து வைத்துவிட்டு வெளியே சென்று கொண்டிருந்தான். அவசர அவசரமாக மொபைலில் ஹோம் என்பதைக் கண்டுபிடித்து அழைக்க, எதிர் முனை கிடைத்ததும் கத்தினான். "பாத்ரூம் பக்கம் மட்டும் போய்டாத..."..
பதிலுக்கு பதிலாக ஏதோ ஒரு அலறல் சப்தம் கேட்க அவன் செய்வதறியாது திகைத்தான்.
சிறிது நேரம் கழித்து நீர் விழும் சப்தம் மட்டும் கேட்க, அவன் காரை விரைந்து இயக்கினான். அவனுடய கார் இயங்கும் வேகத்தை விட அவன் இதயம் இயங்கும் வேகம் அதிகமாய் இருப்பது போல் தோன்றியது.
வீட்டிற்கு மிக அருகில் வந்தும் அவனால் சமாதானம் கொள்ள இயலவில்லை. தன்னுடைய தவற்றிற்கு வருந்தி விழி மூடி இங்கும் அங்குமாய் தலை அசைக்க திடீரென, வேலு வீட்டை விட்டுக் கிளம்பியது பிம்பம் போல் தோன்றியது
கவுண்டர் அட்டாக் : மக்களே.. இவன் இம்சை தாங்கல்.. யாராச்சுக்கு இந்த கதை புரியுதா? இதுக்கு பேர் கதையா?
Subscribe to:
Posts (Atom)
