
வேட்டைக்காரன் படத்தை சன் குழுமம் வேட்டையாடி பின் விஜய் வேட்டையாடி இப்போது எல்லோரும் வேட்டையாடிக்கொண்டு இருக்கிறார்கள்..
எனக்கு ஈ மெயிலில் வந்த செய்தி..உங்களுக்கு ஏற்கனவே வந்திருந்தாலும் ரசிக்க கூடியதே..
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் !!!
உண்கையில்,உறங்கையில் மறக்கிறோம் அதை..!!
அவர்க்கு உண்மையில் எதிரிகள், அவர்களா..??
உணர மறுக்கும் நம்மை விட..??
உடல் நொந்தாலே உளரிடும் ஓர் வார்த்தை அம்மா,
மண் கூட தாய் தானே..!!
தாய்காக போராடும் உறவினர்கள்,
நோய்க்காக என்ன செய்ய..??
இறப்பது எதிரியானால்,சிரிப்பதில் அர்த்தமில்லை,
உயிர் போகும் வலி ஒன்றாய் இருப்பதால்..
இறைவா நிறுத்திடு போரை,
இல்லை எரித்திடு எங்களையும்,
உணர்ந்தாலும்,உணர மறுத்திடும் எங்களையும்..!!
இறுதியாய் ஒன்று,
இணையுங்கள் இந்தியராய்,
சிறு நகரம் தாண்டி செல்ல அனுமதி வாங்கும் நிலையை,
அனுமதியோம் ஒரு நாளும்..!!
************************************************************************************
கண்ணீர் அஞ்சலி..!!
~~~~~~~~~~~~~~~~
மனிதா என்று இறந்தாய்..??
யாருக்கும் தெரியாமல்..
நீ பிறந்ததற்கு சாட்சியம் உள்ளது..
அச்சிலும் சிலர் அகத்திலும்..
கடவுளே..??..!!..
இல்லை உன்னிடமும் சொல்ல முடியாது..
வாள் கொண்டு ,வேல் கொண்டு , நூல் கொண்டு,
நீயும் வண்ணமாய் நிற்பதனால்..
எப்படி இறக்க ஆரம்பித்தோம் நாங்களும்..??
எட்டிப் பார்த்தால் கட்டிக் கொள்ளும் ஓர் தொற்று ,
சாதியாய், மதமாய், இனமாய்
இன்னும் எப்படியெல்லாம் இயலுமோ அப்படியே...
அனைத்தும் தொற்றிக் கொண்டதால்...
சிந்தைக்குள் நுழைந்துவிட்டால்..
அதன் வேலை அது பார்க்கும்..
கண்ணா பார்த்தாயா..??
கீதை மிக பத்திரமாய் எங்களிடம்...
நீ உரைத்த அனைத்தையும் உதறிவிட்டு,
ஓர் வரியை மட்டும் எடுத்துக் கொண்டோம் அதுவும் உனக்காக...
"எங்களிடம்"..எனும் போதே அதன் வேலை அது துவங்கி இருந்தால்,
மாற்றிக் கொள்ளுங்கள் "மக்களிடம்"...
ஓர் வரிக்கு பூங்கொத்தும் ,
"எங்களுக்கு.?" மலர்வளையமும்..!!
கண்ணீருடன்..!!
________________________________________
மிக முக்கிய பின் குறிப்பு:
இது சத்தியமா நான் எழுதலேங்க.. ஆனா இத சொந்தம் கொண்டாட எனக்கு உரிமை இருக்கு.. ஏன்னா இந்த கவிதை எழுதினதே என் தம்பி தான்..